உணவின்றி தவிப்பவருக்கு உணவு வழங்கிய பிக் பாஸ் பிரபலம் - பாராட்டும் ரசிகர்கள்
கொரோனா தொற்று காரணமாக உலகம்முழுவதும் பெரும் இழப்பை மக்கள் தினந்தினம் சந்தித்து வருகின்றார்கள்.
கொரோகா தாக்கத்தை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பல பேர் வேலையின்றி வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
ஏழை மக்களுக்கு தமிழக அரசு, திரையுலக பிரபலங்கள், உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்தளவிற்கு உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் புகழ், நடிகர் ஆரி அர்ஜுனன் மக்களுக்கு உணவு வழங்கி இருக்கிறார்.
திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி உள்ள சாலையோரம் வசிக்கும் 100 பேருக்கு தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக உணவு வழங்கி இருக்கிறார் ஆரி.
இதற்கு பொது மக்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.