மீண்டும் ஓடிடி-யில் ரிலீசாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திரைப்படம்..
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் திட்டம் இரண்டு.
திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், திட்டம் இரண்டு படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
இந்நிலையில் இறுதியாக இப்படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இப்படத்தை வருகிற ஜூலை 30 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ.ரணசிங்கம் திரைப்படம் கடந்தாண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.