சங்கர், கே.வி. ஆனந்த், ஏ.ஆர். ரஹ்மான் எடுத்த புகைப்படம் - இதுவரை நீங்களே பார்த்திருக்க மாட்டீங்க
தமிழ் திரையுலகில் பிரமாண்டமாக படங்களை இயக்கி, பிரமாண்ட இயக்குனர் என்று ரசிகர்கள் மத்தியில் பேரெடுத்தவர் இயக்குனர் சங்கர்.
இவருடைய இயக்கத்தில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் 90% படங்களுக்கு இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்து இருக்கிறார்.
அதே போல் சங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த்.
இவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது இறப்பு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய சோகத்தை தந்தது.
இந்நிலையில் இயக்குனர் சங்கர், கே.வி. ஆனந்த், ஏ.ஆர். ரஹ்மான் அனைவரும் இணைந்து கோட் சூட் போட்டுகொண்டு புகைப்படம் ஒன்று எடுத்துள்ளனர்.
இதுவரை நீங்கள் பார்த்திராத அந்த புகைப்படம் இதோ..