மறைந்த நடிகை சித்ராவுக்கு கடந்த வருடம் நடந்த ஸ்பெஷல் விஷயம்- வைரலாக்கி வருத்தப்படும் ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்தவர் சித்ரா. அந்த கதாபாத்திரத்திற்கே ஒரு அழகு சேர்த்தது அவர் தான் என்றே கூறலாம்.
இந்த சீரியல் மூலம் மக்களின் இடம் பிடித்த அவர் திடீரென சில காரணங்களால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரது இறப்பை இப்போதும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதிலும் அவரது ரசிகர்கள் நடிகையை மறக்காது இதற்கு முன் நடந்த விஷயங்களை ஷேர் செய்து நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
அப்படி கடந்த வருடம் ஆகஸ்ட் 1ம் தேதி நடிகை சித்ராவிற்கு அவரது ரசிகர்களால் ஒரு கொடி டிசைன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை சித்ராவே திறந்து வைத்தார்.
அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்து ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.