மீண்டும் முன்னணி நடிகரை இயக்கும் நடிகர் பிரித்விராஜ்- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் பிரித்விராஜ்.
இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஓர் இயக்குநராக, மோகன்லாலை வைத்து, லூசிபர் எனும் தனது முதல் படத்தை இயக்கினார்.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில், பிரித்விராஜ் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், மீண்டும் மோகன்லாலை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்க இருக்கிறாராம்.
இப்படத்திற்கு ப்ரோ டாடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், முழுக்க முழுக்க காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக, இப்படம் உருவாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் பலரும் தற்போது இப்படத்தை ஏதிர்பார்த்து வருகின்றனர்.