காதல் கிசுகிசு விவகாரம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் - என்ன சொன்னார் தெரியுமா
தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது இந்தியன் 2, அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் குறித்து அடிக்கடி காதல் கிசுகிசுக்கள் சமூக வலைத்தளத்தில் அடிப்படுவதுண்டு.
சமீபத்திய பேட்டியில், இது குறித்து பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் “கடந்த சில ஆண்டுகளாக இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களுடன் இணைத்து என்னை பற்றி பல காதல் கிசுகிசுக்கள் வெளியாகின.
அவை அனைத்துமே பொய்யான வதந்திகள் என்பதால் நான் பதில் கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் நான் அமைதியாக இருந்ததால், ஒரு கட்டத்தில் அந்த வதந்திகள் மாயமாகி விட்டன.
இப்போது என்னை பற்றி காதல் செய்திகள் வருவதில்லை.இது நிம்மதியை தருவதாக தெரிவித்துள்ள ரகுல் பிரீத் சிங், இதுவரை தான் யாருடனும் காதலில் விழுந்ததில்லை " என்றும் கூறியுள்ளார்.