சமந்தா விவாகரத்து போஸ்டை நீக்க உண்மையில் இதுதான் காரணம்! அப்போ சேர மாட்டார்களா?
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்கே வருடத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது சமந்தா அவரது சமூக வலைதள பக்கத்தில் இருந்து விவாகரத்து பற்றிய போஸ்டை நீக்கிவிட்டார். அவர் திடீரென இப்படி செய்ததால் இருவரும் மீண்டும் சேர்கிறார்களோ என நெட்டிசன்கள் கேட்க தொடங்கிவிட்டனர். ஆனால் உண்மையில் சமந்தா தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள் பற்றிய பதிவுகளை இன்ஸ்டாவில் இருந்து நீக்கி வருகிறார்.
அதனால் தான் இந்த போஸ்ட்டையும் நீக்கிவிட்டார் என முன்னணி தெலுங்கு மீடியா ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதனால் சமந்தா - நாக சைதன்யா இருவரும் மீண்டும் சேர வாய்ப்பு இல்லை என தெரிய வந்திருக்கிறது.
.@Samanthaprabhu2 deletes her divorce post on Instagram. Even before one jumps in to what’s cooking, it’s learnt that #Samantha is going clutter-free on her Insta & deleting the posts that no longer relatable to her life. Sadly, Chay Sam may not reunite again as both moved on! pic.twitter.com/FCcTsjhfWM
— Gulte (@GulteOfficial) January 21, 2022