விஜய் டிவியின் ஹிட் சீரியல் தற்போதைக்கு சுத்தமாக நிறுத்தப்படுகிறதா?- ரசிகர்கள் ஷாக்
விஜய் தொலைக்காட்சியில் இரண்டு சிறு குழந்தைகளை முக்கியமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு சீரியல் மௌன ராகம். இந்த சீரியல் மூலம் சிறுமிகள் இருவருமே மக்களிடம் அதிக பாராட்டுக்களை பெற்றார்கள்.
அவர்களை தாண்டி சீரியலின் கதை, பாடல்கள் என செம ஹிட். இந்த சீரியலின் 2ம் பாகம் சில புதிய கலைஞர்களை வைத்து இயக்கப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பில் இருந்து மௌன ராகம் சீரியல் 2 ஒளிபரப்பாகி வந்தது. இப்போது தான் சீரியல் மக்களிடம் கொஞ்சம் ரீச் ஆனது.
அதற்குள் கொரோனா பிரச்சனை வர சீரியல் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மற்ற சீரியல்கள் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்துவரும் நிலையில் இந்த சீரியலின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் தொடங்கப்படவில்லை.
தற்காலிகமாக இந்த சீரியல் நிறுத்தப்படுகிறது என சீரியல் குழுவினரிடம் இருந்தே தகவல் வந்துள்ளது.