மாநாடு படத்திற்காக எஸ்.ஜே. சூர்யா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா..
வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்தை தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை இயக்கினார்.
இதில், நியூ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அன்பே ஆருயிரே படத்திற்கு பிறகு பல ஆண்டுகளுக்கு பின், இசை படத்தின் மூலம், ரீ என்ட்ரி கொடுத்து வெற்றிபெற்றார்.
இதன்பின், கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும், சிறந்த நடிகர் என்று இடம் பிடித்தார்.
மேலும் ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை, என தனது நடிப்பினால் ரசிகர்களை அசரவைத்த எஸ்.ஜே. சூர்யா, சமீபத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்திலும் நடிப்பில் மிரட்டியெடுத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷ்கோடி கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் எஸ்.ஜே. சூர்யா வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை நடிகர் எஸ்.ஜே. சூர்யா சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தெரிவிக்கின்றன.