மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
கொரோனா தாக்கம் காரணமாக முதல் ஊரடங்கில் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன.
அதன்பின், கொரோனா தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய துவங்கிய நிலையில், 50% சதவீதம் இருக்கை எனும் தளர்வுகளுடன் தமிழகத்தில் திரையரங்குகள் திறந்தன.
ஆனால், கொரோனா 2.0 காரணமாக மீண்டும் தமிழகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திரையரங்குகள் மூடப்பட்டது.
இதையடுத்து எப்போது திரையரங்குகள் மீண்டும் இயங்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப செய்தி வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.