பிரபல நடிகையின் மகன் கொரோனாவால் மரணம், சீரியஸான நிலையின் கணவர்- கடும் துக்கத்தில் குடும்பம்
கொரோனா நோய் தொற்று லட்சக்கணக்கான மக்களை தாக்கி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு எல்லாம் தமிழகத்தில் அதிகமாக நோய் தொற்று தாக்கி வந்தது.
இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துள்ளது. ஆனால் மக்கள் மாஸ்க், கைகளை அடிக்கடி கழுவுவது என செய்துகொண்டே இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்த கொரோனா நோய் தொற்றால் தனது மகனை நேற்று இழந்துள்ளார் பிரபல நடிகை கவிதா. நோய் தொற்று காரணமாக மருத்துவமகையில் அனுமதிக்கப்பட்ட அவரது மகன் சாய் ரூப் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
கவிதா அவர்களின் கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார், அவரது நிலைமையும் மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை கவிதா முதல் லாக் டவுன் வந்தபோது நடிப்பை நிறுத்தி வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.