<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News</title>
    <subtitle type="html"><![CDATA[Cineulagam provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://cineulagam.com/googlesitemap.xml"></link>
    <id>https://cineulagam.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://cineulagam.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cu/img/logo.png</logo>
            <updated>2026-09-10T12:59:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குணசேகரனுக்கு வீடு தேடி வந்த ஆபத்து, ஈஸ்வரியின் அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-special-promo-10-sep-1789042761"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-special-promo-10-sep-1789042761</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுகுணசேகரன், தவறுக்கு மேல் தவறு செய்தாலும் தனது பண பலத்தால் ராஜ்ஜியம் செய்துவரும் ஒரு நபர்.&amp;nbsp;என்ன நடந்தாலும் தனது பணம், அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>குணசேகரன், தவறுக்கு மேல் தவறு செய்தாலும் தனது பண பலத்தால் ராஜ்ஜியம் செய்துவரும் ஒரு நபர்.&nbsp;</p><p>என்ன நடந்தாலும் தனது பணம், அதிகாரத்தை வைத்து நான் தண்டனை அனுபவிப்பதில் இருந்து தப்பிப்பேன் என முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் ஜாலியாக வலம் வருகிறார்.</p><p>ஜனனி போட்ட வழக்கில் இருந்து தப்பிக்க ஜாமின் வாங்கியிருந்தவர் இப்போது அவரை அழிக்க அய்யனாருக்கு கட்டுகட்டும் வேலையில் மும்முரமாக இறங்கி இருந்தார். இதற்கு இடையில் ராவணன் செய்த சூழ்ச்சியால் அவரது ஜாமின் கேன்சல் ஆக போலீஸிடம் சிக்கக் கூடாது என ராவணன் உதவியுடன் பதுங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3718b22d-955a-4426-9923-abb458978cdc/26-6aa2a309b552c.webp' /></p><h2>புரொமோ</h2><p>தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தனது ஜாமின் கேன்சல் ஆனதால் ஜனனி தான் அதற்கு காரணம் என செம கோபத்தில் உள்ளார். இதனால் இந்த கட்டுகட்டும் விஷயத்தை நிறுத்தவே கூடாது அதை செய்தே ஆக வேண்டும், ஜனனி அழிந்தே ஆகனும் என மும்முரமாக உள்ளார் குணசேகரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c917e8-9f6b-4133-a111-61f0de797eff/26-6aa2a308d96a5.webp' /></p><p>இதற்கு இடையில் ஜனனி, அக்காக்களிடம் ராவணன் குறித்த உண்மையை கூறி அவர்களுக்கு சில விஷயங்கள் புரிய வைக்கிறார்.</p><p>பின் ஈஸ்வரி, ஜனனிக்கு ஒரு பிரச்சனை என்றால் சும்மா விடமாட்டேன், இந்த கட்டு கட்டும் விஷயத்தை நடக்க விடமாட்டேன் என்கிறார். பின் தலைமறைவாக இருக்கும் குணசேகரன் இடத்திற்கே போலீசார் செல்ல அவர் பயத்தின் உச்சத்தில் பதறுகிறார்.</p><p>இதோ ஸ்பெஷல் புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/z1fbEIM9tNk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:31:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடி ஓடி ஜெயந்தியை கவனிக்கும் திவாகரன்.. கர்ணாவால் கடுப்பான புவனா - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/chinnan-siru-kiliye-today-episode-297-1789033790"></link>
            <id>https://cineulagam.com/article/chinnan-siru-kiliye-today-episode-297-1789033790</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. இந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் திவாகரன் ஜெயந்தியை ஓடி ஓடி கவனிக்க கிருபா அதை பார்த்து கடுப்பான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p>அதாவது கிருபா ஜெயந்திக்கு என்ன வேண்டும் என கேட்டு கேட்டு செய்ய வீட்டில் அனைவரும் ஆச்சரியமும் குழப்பமும் அடைகின்றனர். திவாகரனின் மாற்றத்திற்கு காரணம் என்ன என்பதை அறிந்த புவனா மட்டும் செம கடுப்பில் இருக்கிறாள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8172319c-27f8-4e58-bb31-ecbf24b46748/26-6aa27d4261fda.webp' /></p><p>பிறகு திவாகரன் ரூமுக்கு சென்று ஜெயந்தியின் துணிகளை எடுத்துச் சென்று துவைக்க கர்ணாவும் இந்துவும் இதை மொட்டை மாடியில் இருந்து ரசிக்கின்றனர். கர்ணா சிரிக்க இந்து இப்ப எதுக்கு சிரிக்கிற என்று கேட்க முரட்டுத்தனமா இருக்குங்க ரொமான்டிக்கா மாறுனா இப்படித்தான் இருப்பாங்க போல என்று இந்து மீது கை போட அவள் அவனை முறைக்க கையை எடுத்து விடுகிறான். </p><p>
அடுத்ததாக திவாகரன் ஜெயந்திக்கு நெயில் பாலிஷ் போட்டு விடுவதாக சொல்லி அழைத்துச் செல்ல இங்கே கர்ணா இந்துவுக்கு நெயில் பாலிஷ் போட்டு விடுவதாக ரூமுக்கு அழைத்து வருகிறான். புவனா ரூமுக்குள் என்ன நடக்கிறது என மறைந்து பார்க்க இதை கவனித்த இந்த காலுக்கு போட்டு விடு என காலை காட்ட கர்ணா நெயில் பாலிஷ் போட்டு விட புவனா கடுப்பாகிறாள்.</p><p> </p><p>[M5IC5P ]</p><p>அதைத்தொடர்ந்து திவாகரன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க ஜெயந்தி ஒரு பெரிய லிஸ்ட்டை கொடுக்க அவளை அழைத்து கொண்டு கடைக்கு செல்கிறான். திவாகரனுக்காக தூக்க மாத்திரை கலந்து வைத்திருந்த பாலை விஷ்வா குடித்து தூங்கி விடுகிறான். </p><p>
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? 24 மணி நேரம் முடிந்தால் திவாகரனின் மாற்றம் எப்படி இருக்க போகிறது? என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T10:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை கோலாகலமாக்கும் Zee தமிழ் - என்னவெல்லாம் ஸ்பெஷல்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamil-vinayagar-chathurthi-programs-2026-1789033611"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamil-vinayagar-chathurthi-programs-2026-1789033611</id>
            <summary type="text">சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாட ரசிகர்களுக்காக Zee தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகத் தொலைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாட ரசிகர்களுக்காக Zee தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பாகும் புத்தம் புதிய திரைப்படங்களுடன் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு விருந்தை வழங்குகிறது.</p><p>செப்டம்பர் 14 ஆம் தேதி திங்கள்கிழமை, காலை முதல் இரவு வரை விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. </p><p>
காலை 9.30 மணிக்கு பிரபல பேச்சாளரும் எழுத்தாளருமான கலைமாமணி சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. "இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தில் பிரச்சனைகள் பெருகப் பெரிதும் காரணம் பிள்ளைகளா? பெற்றோர்களா?" என்ற சுவாரஸ்யமான தலைப்பில் நடைபெறும் இந்த பட்டிமன்றம், நகைச்சுவையும் சிந்தனையும் கலந்த கருத்துப் பரிமாற்றங்களால் அனைவரையும் கவரவுள்ளது. </p><p>
அதனைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு, சந்தோஷ் ஸ்ரீராம், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் மற்றும் விடிவி கணேஷ் நடித்துள்ள Double Occupancy திரைப்படம் உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக வருகிறது. காதல், நகைச்சுவை, மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கற்பனை கலந்த இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கவுள்ளது. </p><p>
அதைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணிக்கு, ஜெயராம், ஊர்வசி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள 'பரிமளா &amp; கோ' திரைப்படம் உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகிறது. கலகலப்பான நகைச்சுவை, குடும்ப பாசம் மற்றும் மனதை நெகிழ வைக்கும் தருணங்கள் நிறைந்த இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கவுள்ளது. </p><p>
மேலும் நாள்தோறும் ஒளிபரப்பாகும் தொடர்களும் வழக்கம் போல ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>
சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம், முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரண்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் ரசிகர்கள் விரும்பும் தொடர்கள் என, முழு நாளும் குடும்பத்துடன் மகிழ்ந்து ரசிக்க வேண்டிய நிகழ்ச்சிகளை Zee தமிழ் வழங்குகிறது. </p><p>
இந்த விநாயகர் சதுர்த்தியை உங்கள் குடும்பத்தோடு இணைந்து Zee தமிழுடன் கொண்டாடத் தவறாதீர்கள்! 
&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T10:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டாடி திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-movie-review-1789030638"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-movie-review-1789030638</id>
            <summary type="text">வெற்றிமாறன் பட்டறையில் இருந்து வந்தவர் மதிமாறன் புகழேந்தி, காமெடியன் டூ ஹீரோ சூரி தொடர் வெற்றி நாயகனாக வருபவர், இவர்கள் இணைந்து கொடுத்த ஸ்போர்ட்ஸ் ட்ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெற்றிமாறன் பட்டறையில் இருந்து வந்தவர் மதிமாறன் புகழேந்தி, காமெடியன் டூ ஹீரோ சூரி தொடர் வெற்றி நாயகனாக வருபவர், இவர்கள் இணைந்து கொடுத்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா மண்டாடி ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e0ab461-fae7-4c04-8a06-41a86390af49/26-6aa270f1f2122.webp' /></p><p></p><h2>கதைக்களம்
</h2><p>
சூரி சென்னையில் ஒரு தீம் பார்க்கில் வேலை பார்த்து வருகிறார். அவரின் சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டத்தில் படகு போட்டி சண்டையால் சாட்டைபுலி(சுஹாஸ்) மகனை, மாரி என்பவர் கொல்ல முயற்சிக்கிறார். இதனால் மாரியை கொல்ல சாட்டைபுலி துணிய, மாரியை சூரியிடம் தஞ்சம் போக சொல்கின்றனர்.</p><p>சூரி அவர் தன் முன்னாள் காதலி மகன் என்பதை தெரிந்துக்கொண்டு பல வருடம் கழித்து தன் ஊருக்கு வந்து மாரி உயிருக்கு எந்த ஆபத்தும் வரகூடாது என பஞ்சாயத்து பேசுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa49a6a-f4bf-4f55-9786-fb6a15898a0d/26-6aa2714838164.webp' /></p><p>அப்போது சாட்டைபுலி அப்படியென்றால் நம்ம இரண்டு வகையறாவும் படகு போட்டி வைத்துகொள்வோம், அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, தோற்றவர்கள் இனி போட்டியில் இறங்ககூடாது என பேசி முடிக்கின்றனர்.
</p><p>இதன் பிறகு சூரி படகு போட்டியில் மாரியை ஜெயிக்க வைத்து, சாட்டைபுலியை வென்றாரா? சூரிக்கும், சாட்டைபுலிக்கும் என்ன பிரச்சனை ஏன் இவ்வளவு கோபத்துடன் ஒருவர் மீது ஒருவர் இருக்கிறார் என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61d7b5a3-e625-4b57-b3ce-6cfc3520d05d/26-6aa2714909c5d.webp' /></p><p>
</p><h2>படத்தை பற்றிய அலசல்</h2><p>

சூரி இனி ஆக்‌ஷன் ஹீரோ தான் போல, அப்படியே மீனவ குடும்ப நபராக மனதில் நிற்கிறார், அதிலும் போட் போட்டி காட்சிகளுக்கு பயிற்சி கொடுக்கும் இடம், சாட்டைபுலி மகன் செய்த செயலால் தன் ப்ளேயர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போடு, இறங்கி அடிக்கும் போது அப்படியொரு ஆக்ரோஷன், கண்டிப்பாக சூரி திரைப்பயணத்தில் மற்றொரு மைல்கல் தான் இந்த மண்டாடி.
</p><p>
இவரை தாண்டி சுஹாஸ் தெலுங்கு நடிகராக இருந்தாலும், லிப் சிங்க் எங்கும் மிஸ்டேக் ஆகவில்லை, வெற்றிமாறன் தான் டப்பிங் பேசியிருப்பார் போல, கச்சிதமாக பொருந்தி போகிறது குரல், மிரட்டல் பெர்ப்பாமன்ஸ்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e6a6e6-7f74-43b4-8f23-13545d5bb408/26-6aa27149b8f7c.webp' /></p><p>இதை தாண்டி மாரி, சாட்டை புல் மகன், மஹிமா, சத்யராஜ் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர், படத்தின் முதல் பாதி சூரி திரும்பி வந்து படகு போட்டி கோச்சிங் கொடுப்பது, பிறகு ட்ரெயினிங் மேட்ச் அதை தொடர்ந்து எடுக்கும் சபதம் என செம விறுவிறுப்பாகவே செல்கிறது.
</p><p>
அதிலும் அந்த ட்ரெயினிங் மேட் படகு போட்டி அத்தனை பிரமாண்டம், ரசிகர்களுக்கு சீட் எட்ஜ் காட்சிகளாக கவர்ந்து இழுத்துள்ளனர். கண்டிப்பாக சார்பட்டா பாக்ஸிங், ஆடுகளம் சேவல் சண்டை போல் இந்த மண்டாடி படகு போட்டியும் மனதில் நிற்கும்.</p><p>இரண்டாம் பாதி சத்யராஜ் முனி என்ற கதாபாத்திரத்தில் கோச் ஆக வர, சூரிக்கும், சாட்டைபுலிக்கும் இருந்த உறவு என்ன, இவர்களுக்குள் என்ன பகை, ஏன் இந்தளவு வந்தது, மஹிமாவை ஏன் சூரி கைவிட்டார், சத்யராஜ் என்ன ஆனார் என்ற பல காரணங்களை சொல்ல ப்ளாஷ்பேக் கொஞ்சம் பொறுமையை சில இடங்களில் சோதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd167ac-9d6a-45cd-98a8-01465a741e04/26-6aa2714a73897.webp' /></p><p></p><p>ஆனால், அதை தொடர்ந்து வரும் கிளைமேக்ஸ் அரை மணி நேரம் படகு போட்டி வெறித்தனம், கண்டிப்பாக ஸ்போர்ட்ஸ் விரும்பிகளுக்கு செம திரை விருந்து.
</p><p>டெக்னிக்கல் விஷயம் என்று பார்த்தால் படம் முழுவதும் லைவ் லொக்கேஷன், படகு போட்டி என அனைத்தையும் யதார்த்தமாக காட்டிய ஒளிப்பதிவு, ஜிவி பிரகாஷ் இசை பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்ல்லை, பின்னணி இசை அருமை.
</p><p><b><u>க்ளாப்ஸ்
</u></b></p><ul><li>
சூரிஒன் மேன் ஷோ போல் மிரட்டியுள்ளார், சுஹாஸ் தெலுங்கு நடிகர் தமிழுக்கு நல்ல வரவேற்பு.
</li><li>
படகு போட்டி காட்சிகள்
</li><li>
கிளைமேக்ஸ், இடைவேளை
</li><li>
ஒளிப்பதிவு</li></ul><p><b><u>

பல்ப்ஸ்
</u></b></p><ul><li>
ப்ளாஷ்பேக் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்திருக்கலாம்.</li><li>

படகு போட்டி குறித்து இன்னும் விவரமாக கூறியிருக்கலாம்.
</li></ul><p><b>
மொத்தத்தில் மண்டாடி சூரியின் வெற்றிபயணம் இந்த படகு போட்டியிலும் வென்று தொடர்கிறது.</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a23e0f84-f270-4130-9586-befba99c196e/26-6aa270f136985.webp' /></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-10T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்தார் 2: திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-movie-review-1789029509"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-movie-review-1789029509</id>
            <summary type="text">பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து உருவாகி கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து உருவாகி கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 உருவாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள இப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம். </p><p>

ஆனால், அதற்கு முன் சர்தார் முதல் பாகத்தின் கதையை சற்று பார்ப்போம்.</p><h2>சர்தார் கதைக்களம்</h2><p>சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு 'ஒன் நேஷன் ஒன் பைப்லைன்' என்கிற திட்டத்தை வில்லன் மகாராஜ் ரத்தோர் இந்தியாவில் கொண்டு வருகிறார். இந்த திட்டம் கேட்க நன்றாக இருந்தாலும், இது முற்றிலும் மக்களுக்கு எதிரான ஒன்றாகும். இந்தியாவில் உள்ள மொத்த தண்ணீரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மக்களை அல்லோலப்பட வைக்க வேண்டும் என்பதே மகாராஜ் ரத்தோரின் திட்டமாகும்.</p><p>இதனை கண்டுபிடிக்கும் லைலாவை (சமீரா தாமஸ்) வில்லன் கும்பல் கொண்டுவிடுகிறது. அவருடைய மரணத்தில் ஏதோ மர்மம் உள்ளது என்று அறியும் கார்த்தி (விஜய பிரகாஷ்), உண்மை என்னவென்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால், இந்த 'ஒன் நேஷன் ஒன் பைப்லைன்' திட்டத்தை ஒரே ஒருவரால் மட்டுமே முடியும், அவர்தான் சர்தார் என யுகி சேது சொல்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3467f00-1d6f-44f7-8f0c-aec2bac69225/26-6aa26c896857f.webp' /></p><p></p><p>இந்தியாவால் பயிற்சி கொடுக்கப்பட்டு தலைசிறந்த உளவாளியாக இருந்தவர் இந்த சர்தார். தனது குடும்பத்தை விட நாடும், நாட்டின் எதிர்காலமும் தான் முக்கியம் என்று கருதி, மிகப்பெரிய தியாகத்தை செய்து தேச துரோகி என்கிற பட்டத்தையும் வாங்கிக்கொண்டார். மேலும், சர்தாரின் குடும்பத்தை மகாராஜ் ரத்தோர் கொன்று குவித்தான். இவன் செய்த துரோகத்தினால் 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சர்தாரிடம் எப்படியாவது 'Code Red' போய் சேர வேண்டும் என முயற்சிக்கின்றனர்.</p><p>அவர்களுடைய முயற்சியின் பலனாக அந்த 'Code Red' சர்தாரிடம் போய் சேர, சிறையில் உடனடியாக தப்பித்து வரும் சர்தார், 'ஒன் நேஷன் ஒன் பைப்லைன்' திட்டத்தை தனது மகனுடன் சேர்ந்து முறியடிக்கிறார். இருப்பினும் தன்னை பற்றிய உண்மை வெளி உலகிற்கு தெரியவேண்டும் என்று 'Once a spy, Always a spy' என கூறிவிட்டு சென்றார். இதன்பின் போலீசில் இருந்து நீக்கப்பட்ட விஜய பிரகாஷ், RAW-வில் Spy ஏஜென்ட்டாக இணைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f626015-3af6-4b45-ad22-552bcb7ed581/26-6aa26d86745dc.webp' /></p><p>இதன் தொடர்ச்சியாக சர்தார் 2 எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.</p><h2>சர்தார் 2 கதைக்களம்</h2><p>கதையின் ஆரம்பமே RAW, 'வால்ரஸ்' எனும் ஏஜென்ட்டை தேடி கொண்டு இருக்கிறது. கார்த்தியும் அந்த 'வால்ரஸ்' என்பவரை தேடி செல்ல, வில்லன் எஸ்.ஜே. சூர்யாவின் அடியாட்களும் அவரை தேடி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிடுகிறார்.</p><p>ஆனால், இறப்பதற்கு முன், கத்தி வடிவில் உள்ள சாவி ஒன்றை கார்த்தியிடம் கொடுக்கிறார். இது என்ன? இதற்கு பின் என்ன ரகசியம் உள்ளது என்பதை தேட ஆரம்பிக்கும் கார்த்தி, இதேபோல் இன்னும் இரண்டு சாவிகள் உள்ளன என்பதையும், இந்த மூன்று சாவிகளும் 'Bio apocalypse' உருவாக்கும் ஒரு விஷயத்தை திறக்க உதவும், அதை தேடித்தான் எஸ்.ஜே. சூர்யா வருகிறார்; மனித குளத்தில் பாதியை அழிப்பதே அவருடைய திட்டம் என்பதையும் அறிந்துகொள்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d59bd3b-d1e8-4462-948b-f9beae41409a/26-6aa26d8746ef9.webp' /></p><p>தன்னிடம் ஒரு சாவி உள்ளது, மீதமுள்ள இரண்டு சாவிகளை தேட ஆரம்பிக்கும் கார்த்தி, இந்த கதை இப்போது ஆரம்பிக்கவில்லை, 1981-லேயே தொடங்கிவிட்டது என்று கண்டறிகிறார். மேலும், இந்த பேரழிவு 1981-ஆம் ஆண்டு நடக்காமல் தடுக்க உதவியது தனது தந்தை சர்தார் என்கிற உண்மையும் கார்த்திக்கு தெரிய வருகிறது. </p><p>
நாட்டை காப்பாற்றினாலும், அந்த Bio weapon-இன் கசிவால் கிராம மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். 3000 பேர் கொண்ட கிராமத்தில் வெறும் 54 நபர்களை மட்டும்தான் சர்தார் கொண்டு வந்த மாற்று மருந்தை வைத்து காப்பாற்ற முடிகிறது. கிராம மக்கள் அனைவரையும் காப்பாற்றுவேன் என வாக்கு கொடுத்தேனே என்னால் முடியவில்லையே என இந்த குற்ற உணர்ச்சி சர்தார் கடுமையாக பாதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1cadf6b-2301-48d2-9878-c5a2c91ddac0/26-6aa26d87f266e.webp' /></p><p>
</p><p>1981-ஆம் ஆண்டு தடுக்கப்பட்ட பேரழிவை மீண்டும் எதற்காக தற்போது நிகழ்த்த வேண்டும் என எஸ்.ஜே. சூர்யா நினைக்கிறார்? அவர் இதை செய்ய என்ன காரணம்? 'Bio apocalypse' நடக்காமல் சர்தார் தடுத்தாரா இல்லை? என்பதே படத்தின் மீதி கதை.
</p><h3>படத்தை பற்றிய அலசல்</h3><p>சர்தார் முதல் பாகத்தில் தண்ணீரால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதனால் ஆண்டுக்கு எவ்வளவு குழந்தைகள் இறந்து போகிறார்கள் என்பதை பற்றியும் காட்டியிருந்தார் இயக்குநர் பி.எஸ். மித்ரன்.</p><p>சர்தார் 2-ஆம் பாகத்தில் 'Colistin' என்கிற antibiotic (நுண்ணுயிர் எதிர்ப்பி) நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு பெரிய விஷயத்தை ஏற்படுத்தி வருகிறது; இதனால் வருங்காலம் எவ்வளவு பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என்பதை பற்றி காட்டியுள்ளார். அதை அவர் எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, நிழல்கள் ரவி ஆகியோரை வைத்து சொன்ன விதம், அந்த காட்சி அமைந்திருந்தது எல்லாம் மிகச்சிறப்பாக இருந்தது. அந்த காட்சியில் நம்மை சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்திருந்தார். சொல்ல வந்த விஷயத்தை பக்காவாக இயக்குநர் சொல்லியிருந்தாலும், படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம் என தோன்றியது. மேலும், எமோஷனல் கனெக்ட் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d1ffdf-42af-4ae0-b9a3-874fa0561301/26-6aa26d88abdcd.webp' /></p><p>
</p><p>கதாநாயகன் கார்த்தி, சர்தாராகவும் மகன் விஜய பிரகாஷாகவும் இரண்டு கதாபாத்திரங்களையும் சிறப்பாக செய்துள்ளார். குறிப்பாக சர்தார் பிளாஷ்பேக் காட்சிகள், இடைவேளை என்ட்ரி, ஆக்ஷன் காட்சிகள் என பட்டையை கிளப்பியுள்ளார்.</p><p>வில்லன் எஸ்.ஜே. சூர்யா வழக்கம் போல் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இவரால் மட்டும்தான் இப்படி நடிக்க முடியும் என்று, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார். குறிப்பாக யோகி பாபு, நிழல்கள் ரவியுடன் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இருக்கும் காட்சிக்கு திரையரங்கில் கைதட்டல்கள் பறந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33a3c822-dbe0-4259-9445-dad40515b131/26-6aa26de6501b5.webp' /></p><p></p><p> </p><p>
மாளவிகா மோகனன் தனக்கு கொடுக்கப்பட்ட ஏஜென்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து நம் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் நாசர், ஆஷிகா ரங்கநாத், அவினாஷ், பாபு ஆண்டனி, யோகி பாபு, நிழல்கள் ரவி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு தேவையான விஷயத்தை நன்றாக செய்துள்ளனர். </p><p>
ஆக்ஷன் காட்சிகள் படத்தில் மிரட்டலாக இருந்தன. அதேபோல் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-இன் பின்னணி இசை, டெக்னிக்கல் ஒர்க்ஸ் என அனைத்தும் சூப்பர். </p><p><b><u>
பிளஸ் பாயிண்ட்ஸ்
</u></b></p><ul><li>
கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பு</li><li>

நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
</li><li>
கதைக்களம்

'Colistin' என்கிற antibiotic குறித்து படத்தில் பேசியது
</li><li>
கதாபாத்திர வடிவமைப்பு
</li></ul><p><b><u>
மைனஸ் பாயிண்ட்ஸ் </u></b></p><ul><li>

படத்தின் நீளம்
</li><li>
இன்னும் வலுவாக எமோஷனல் கனெக்ட் இருந்திருக்கலாம்</li></ul><p><b>

மொத்தத்தில் இந்த சர்தார் 2 மிஷன் வெற்றிகரமாக நிறைவேறியது. 
&nbsp;&nbsp;</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0585e9a9-a9b6-4416-ae89-20659a620d2f/26-6aa26c88b4624.webp' /></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UVzewCmqj6U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:44:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் நடிகை அனஸ்வரா ராஜனின் அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-anaswara-rajan-latest-photos-1789008558"></link>
            <id>https://cineulagam.com/article/actress-anaswara-rajan-latest-photos-1789008558</id>
            <summary type="text">நடிகை அனஸ்வரா ராஜன் மலையாளத்தில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்துள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அனஸ்வரா ராஜன் மலையாளத்தில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்துள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த வித் லவ் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். </p><p>இந்த நிலையில், இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் அனஸ்வரா ராஜனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ நீங்களே பாருங்க:&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T07:10:00+00:00</updated>
        </entry>
    </feed>
