<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News</title>
    <subtitle type="html"><![CDATA[Cineulagam provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://cineulagam.com/googlesitemap.xml"></link>
    <id>https://cineulagam.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://cineulagam.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cu/img/logo.png</logo>
            <updated>2026-08-13T14:43:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதந்திர தினத்தில் தொலைக்காட்சியில் விஜய், சூர்யா பட ஸ்பெஷல்... இரண்டு படத்திலும் த்ரிஷா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/independence-day-vijay-suriya-special-movies-1786630002"></link>
            <id>https://cineulagam.com/article/independence-day-vijay-suriya-special-movies-1786630002</id>
            <summary type="text">சுதந்திர தினம்மக்களின் பொழுதுபோக்கு விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் விஷயம் தான் தொலைக்காட்சி. சன், விஜய், ஜீ தமிழ் என ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சுதந்திர தினம்</h2><p>மக்களின் பொழுதுபோக்கு விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் விஷயம் தான் தொலைக்காட்சி. </p><p>சன், விஜய், ஜீ தமிழ் என ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள். சன் டிவி என்றால் சீரியலுக்கும், விஜய் டிவி என்றால் ரியாலிட்டி ஷோக்களும் பேமஸாக உள்ளது. </p><p>சாதாரண நாட்களில் எப்போதும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் ஒளிபரப்பாகி வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/393c28ac-1c63-425a-a727-4dc11c9cd5c0/26-6a7dd32024f98.webp' /></p><p>
</p><h2>திரைப்படம்</h2><p>
வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினம், அந்த தினம் ஸ்பெஷல் என்றாலும் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் கொடியேற்ற இருப்பதை பார்க்க மக்கள் ஆவலாக உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5575628a-6c61-4acf-8323-e6237a43e6e4/26-6a7dd32113b7f.webp' /></p><p>
</p><p>இந்த நிலையில் தொலைக்காட்சியிலும் ஆகஸ்ட் 15 ஸ்பெஷல் படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
சன் டிவியில் சுதந்திர தினம் அன்று மாலை 6.30 மணிக்கு விஜய் த்ரிஷா நடித்த லியோ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. </p><p>அதேபோல் ஜீ தமிழில் ஆகஸ்ட் 15 சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகி மாஸ் வெற்றியடைந்த கருப்பு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.
இந்த இரண்டு படத்திலுமே த்ரிஷா நடித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-13T14:22:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய வேண்டுகோள் வைக்கும் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில்... என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mirchi-senthil-request-to-his-fans-1786624613"></link>
            <id>https://cineulagam.com/article/mirchi-senthil-request-to-his-fans-1786624613</id>
            <summary type="text">மிர்ச்சி செந்தில்தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு சினிமா பிரபலம் தான் மிர்ச்சி செந்தில். வானொலியில் பணியாற்றி மக்களின் மனதை வென்றவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மிர்ச்சி செந்தில்</h2><p>தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு சினிமா பிரபலம் தான் மிர்ச்சி செந்தில். வானொலியில் பணியாற்றி மக்களின் மனதை வென்றவர் அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தார்.</p><p>முதன்முறையாக ஹீரோவாக சரவணன் மீனாட்சி என்ற தொடர் நடித்தார், அவருக்கு அந்த சீரியல் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுத்தது என்று தான் கூற வேண்டும். அந்த சீரியலில் நடித்த ஸ்ரீஜாவும், இவரும் காதலிக்க திருமணமும் செய்துகொண்டனர்.</p><p>இவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் கழித்து ஒரு குழந்தை பிறந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f594556-f94d-4882-9614-fa375b33f0f0/26-6a7dc4077b7f7.webp' /></p><h2>வேண்டுகோள்</h2><p>கடைசியாக மிர்ச்சி செந்தில் ஜீ தமிழில் அண்ணா சீரியலில் நடித்திருந்தார். அந்த தொடரும் சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.&nbsp;</p><p>இந்த நிலையில் மிர்ச்சி செந்தில் ஒரு பேட்டியில் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.&nbsp;அதில் அவர், திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து தான் எங்களுக்கு குழந்தை பிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1554e68-48ba-4f5e-8663-236ad4ccd0c6/26-6a7dc4d744ec0.webp' /></p><p> </p><p>அந்த 10 வருஷத்தில் எங்களுக்குள்ள நிறைய பிரச்சனை வந்தது. இப்போது இருக்க நிறைய பேர் செட்டில் ஆகிட்டு குழந்தை பெத்துக்கலாம்னு நினைக்குறாங்க, தயவு செய்து அந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க. எவ்ளோ சீக்கிரம் பெத்துக்க முடியுமோ பெத்துக்கோங்க. </p><p>சைகலாஜிக்கா ஒரு குழந்தை வந்தா கணவன் மனைவிக்கு இடையே ஒரு பாண்டிங் வரும் என கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-13T13:18:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/producer-first-review-about-vishwanath-and-sons-1786614040"></link>
            <id>https://cineulagam.com/article/producer-first-review-about-vishwanath-and-sons-1786614040</id>
            <summary type="text">சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள &#039;விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்&#039; திரைப்படத்தை பற்றிய தனது முதல் விமர்சனத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் &amp; சன்ஸ்' திரைப்படத்தை பற்றிய தனது முதல் விமர்சனத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.</p><p></p><p> </p><h2>

விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>
நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ,விஸ்வநாத் &amp; சன்ஸ், திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg" target="_blank">மமிதா </a>பைஜூ, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c9b92e1-4a2d-460c-b7c7-6d63ccdb09c6/26-6a7d911c72c11.webp' /></p><p>மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தை பற்றிய தனது முதல் விமர்சனத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a6e705-8499-4b4f-a219-32e94384d1d5/26-6a7d911bbb0b9.webp' /></p><h2>ஸ்வப்னா தத்தின் முதல் விமர்சனம்</h2><p>

மிகவும் அழகான வார இறுதி வரவிருக்கிறது. சிரிப்பு, கண்ணீர், நெகிழ்ச்சி என விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் உண்மையிலேயே மனதை நெகிழவைக்கும் படைப்பு. சூர்யா சார் உங்கள் மீது காதல் கொள்ளாமல் இருக்க முடியுமா? மமிதா பைஜூ நீங்கள் ஒரு துடிப்பான ஆற்றல் மிக்கவர்; இப்போது அந்த ஆற்றல் தீப்பொறியாய் ஜொலிக்கிறது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The cutest weekend is on the way! <br>Laughs, tears, warmth<a href="https://x.com/hashtag/VishwanathAndSons?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishwanathAndSons</a> has <br>so much heart♥️<a href="https://x.com/Suriya_offl?ref_src=twsrc%5Etfw">@Suriya_offl</a> sir, how can one not fall in love with you? <a href="https://x.com/_mamithabaiju?ref_src=twsrc%5Etfw">@_mamithabaiju</a>, you’re a live wire that just caught fire :))</p>&mdash; Swapnadutt Chalasani (@SwapnaDuttCh) <a href="https://x.com/SwapnaDuttCh/status/2087524253260501195?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-13T11:47:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகே அழகு சீரியல் நடிகை நக்ஷத்ராவின் அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nakshatra-nagesh-recent-photoshoot-1786617680"></link>
            <id>https://cineulagam.com/article/nakshatra-nagesh-recent-photoshoot-1786617680</id>
            <summary type="text">சீரியல் நடிகை நக்ஷத்திரா நாகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரியல் நடிகை நக்ஷத்திரா நாகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><h2>

நடிகை நக்ஷத்ரா
</h2><p>
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நக்ஷத்திரா. நடிகை மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து தற்போது அழகே அழகு சீரியலில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். </p><h2>

போட்டோஷூட்
</h2><p>
தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகை நக்ஷத்திரா, அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p>

இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-08-13T11:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோஜாதான் மணப்பெண்ணா? கடைசி நிமிடத்தில் ஷாக் கொடுத்த அரசி.. உடைந்த சாமந்தியின் ரகசியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/samantha-serial-today-episode-review-1786614958"></link>
            <id>https://cineulagam.com/article/samantha-serial-today-episode-review-1786614958</id>
            <summary type="text">சாமந்திஇரவு 8 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் சாமந்தி. இன்று ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட் மற்றும் அதிரடி தருணங்களுடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சாமந்தி</h2><p>இரவு 8 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் சாமந்தி. இன்று ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட் மற்றும் அதிரடி தருணங்களுடன் வர இருக்கிறது. நேற்றைய எபிசோடில் கேக்கில் விஷம் கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அரசியின் ஒரு அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுக்கிறது!

விஷம் கலந்த கேக் விவகாரம் தெரிய வந்ததும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக வேறொரு கேக் கொண்டு வரப்பட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்கிறது. </p><p>இந்த சூழலில், "அம்மா நம்மள ஏதாவது செய்துவிடுவார்களோ?" என்ற பயத்தில் ரோஜா தனியாக சென்று நிற்கிறாள். அவளின் பதற்றத்தை கவனிக்கும் ஆதவ் என்ன நடந்தது என்று கேட்க, ரோஜா திறமையாக நிலைமையை சமாளித்து விடுகிறாள்.

இதையடுத்து, குடும்பத்தினரை ஒன்றாக கூட்டும் அரசி, ஆதவ்வின் திருமணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். மணப்பெண் யார் என்பதை சொல்லப் போகிறேன் என கூறி அனைவரின் எதிர்பார்ப்பையும் உச்சத்திற்கு கொண்டு செல்கிறார். அப்போது திடீரென ரோஜாவின் கையை பிடித்து உயர்த்தி "இவர்தான் மணப்பெண்" என கூற, ரோஜா மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் கலந்த உணர்வில் உறைந்து போகிறாள். ஆனால் அடுத்த நொடியில் அனைவரையும் ஷாக் அடைய வைக்கும் வகையில், அரசி வேறொரு பெண்ணை ஆதவ்வின் மணப்பெண்ணாக அறிவிக்கிறார்.</p><p>
</p><p>
</p><h2>அதிரடி</h2><p>அதன் பிறகு குடும்பத்தினர் அனைவரும் இணைந்து குரூப் போட்டோ எடுக்கிறார்கள். வேலைக்காரர்களையும் போட்டோவுக்கு அழைக்க முயற்சி செய்யப்படும்போது, அதற்கு அரசி கோபம் அடைவது புதிய சலசலப்பை ஏற்படுத்துகிறது.

மறுபுறம், காட்டு ராஜா பரிசாக கொடுத்த நெக்லஸை அணிந்து கண்ணாடி முன் ரசிக்கும் அரசி, அர்ஜுன் கொடுத்த பொம்மையையும் பார்த்து வியக்கிறாள். அந்த பொம்மையில் இருந்த நுணுக்கமான விவரங்களை கண்டு ஆச்சரியப்படும் அரசி, அர்ஜுனை நேரில் சந்தித்து, "இந்த பொம்மை உனக்கு எப்படி கிடைத்தது? நெக்லஸை இவ்வளவு தத்ரூபமாக எப்படி வரைந்தாய்?" என்று கேட்கிறாள்.</p><p>
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fe60eee-6cf5-4954-8d3d-ef63f503ba29/26-6a7d94b44651b.webp' /></p><p>அப்போது அர்ஜுன் ஒரு பெரிய ரகசியத்தை உடைக்கிறான். "இதெல்லாம் நான் செய்யவில்லை... இதற்குப் பின்னால் இருப்பது சாமந்திதான்!" என்று உண்மையை வெளிப்படுத்த, அரசி அதிர்ச்சியில் உறைகிறாள்.

*அரசியின் அடுத்த முடிவு என்ன? சாமந்தியின் உண்மை வெளிச்சத்துக்கு வருமா? ரோஜாவின் வாழ்க்கையில் என்ன திருப்பம் காத்திருக்கிறது? இப்படியான பரபரப்பான காட்சிகளை காண, இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சாமந்தி* சீரியலை தவறாமல் பாருங்கள்!</p>]]></content>
            <updated>2026-08-13T11:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ள நோட்டு விவகாரத்தில் சிக்கிய பாண்டி... உண்மை வெளியாகுமோ என நடுங்கும் மனோ! வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-today-episode-aug-13-2026-1786615380"></link>
            <id>https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-today-episode-aug-13-2026-1786615380</id>
            <summary type="text">Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான குடும்பத் தொடர் வாகை சூடவா, அடுத்தடுத்த பரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான குடும்பத் தொடர் வாகை சூடவா, அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நேற்றைய எபிசோடில் கள்ள நோட்டு விவகாரத்தில் பாண்டி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று உண்மை வெளிச்சத்துக்கு வருமா என்ற பதற்றத்துடன் கதை நகர்கிறது.</p><p>பாண்டி கள்ள நோட்டுகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து கைது செய்யப்பட்டிருப்பது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. என்ன நடந்தது என்று புரியாமல் அனைவரும் குழப்பத்தில் தவிக்க, இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதோ இருக்கிறது என்ற சந்தேகம் மீனாட்சிக்கு ஏற்படுகிறது. குறிப்பாக ஜீவாவின் நடவடிக்கைகள் மீது அவள் கவனமாக இருக்கத் தொடங்குகிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e38cfc6-270b-40ff-9d24-e17c3674c66e/26-6a7d96581db57.webp' /></p><p>மறுபக்கம், இந்த பிரச்சனைக்கு காரணம் பணம் கொடுத்த வாசுதேவன்தான் என்று அப்பத்தா சந்தேகப்படுகிறார். உடனே அவருக்கு போன் செய்து கடுமையாக கேள்வி கேட்க, வாசுதேவன் அதிர்ச்சியடைந்து, "முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க" என்று கேட்கிறார். அதன் பிறகு முழு விஷயத்தையும் தெரிந்துகொண்ட வாசுதேவன், "நீங்க உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்க... நான் அங்க வந்து பேசிக்கிறேன்" என்று உறுதியளிக்கிறார்.
</p><p>இந்த விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறக்கூடும் என்பதால், அப்பத்தா வீட்டில் இருப்பவர்களை யாரையும் அழைத்துச் செல்லாமல், மனோவை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புகிறார். இதனால் மனோவின் பதற்றம் மேலும் அதிகரிக்கிறது. ஏதாவது உண்மை வெளிவந்து விடுமோ என்ற பயம் அவனை உள்ளுக்குள் வாட்டுகிறது.
</p><p>அதே நேரத்தில், வீட்டிற்கு வரும் ஜீவாவை மீனாட்சி நேரடியாக அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறாள். ஜீவாவின் மீதான தனது சந்தேகத்திற்கு பதில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவள் இருக்கிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76e96195-4f69-453e-a786-1e93ef2d98f0/26-6a7d9657689d2.webp' /></p><p>போலீஸ் ஸ்டேஷனில் ஒரு முக்கியமான திட்டத்தை போடுகிறார் அப்பத்தா. மனோவை வேறு ஒரு வேலைக்காக அங்கிருந்து தூரமாக அனுப்பிவிட்டு, வாசுதேவனை ஸ்டேஷனுக்கு வரச் சொல்கிறார். ஒருபக்கம் வாசுதேவன் அவசரமாக அங்கு வந்து கொண்டிருக்க, மறுபக்கம் மீனாட்சியும் ஜீவாவும் போலீஸ் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்.
</p><p>இப்படி அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கப் போகும் சூழல் உருவாகியுள்ள நிலையில், கள்ள நோட்டு விவகாரத்தின் உண்மை வெளிவருமா? பாண்டி இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பாரா? மீனாட்சியின் சந்தேகம் சரிதானா? மனோ எதற்காக இவ்வளவு பயப்படுகிறார்?
</p><p>இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துகொள்ள, வாகை சூடவா சீரியலை இன்று இரவு Zee தமிழில் தவறாமல் கண்டுகளியுங்கள்!
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA['மொத ராத்திரி' திரைப்படத்தின் டிரைலர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/modha-rathri-movie-trailer-1786611156"></link>
            <id>https://cineulagam.com/article/modha-rathri-movie-trailer-1786611156</id>
            <summary type="text">நடிகை அனிஷ்மா அனில்குமார், நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள &#039;மொத ராத்திரி&#039; திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அனிஷ்மா அனில்குமார்

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அனிஷ்மா அனில்குமார், நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள '<a href="https://www.youtube.com/watch?v=cfEKCH5MuWc" target="_blank">மொத ராத்திரி</a>' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.</p><h2>

அனிஷ்மா அனில்குமார்</h2><p>

சிறை, யூத் ஆகிய திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் மனதை கவர்ந்த நடிகை அனிஷ்மா அனில்குமார். இவர் கதாநாயகியாக நடித்து தற்போது உருவாகியுள்ள திரைப்படம்தான் 'மொத ராத்திரி'. இப்படத்தில் கதாநாயகனாக ரிஷிகாந்த் நடித்துள்ளார். </p><h2>

'மொத ராத்திரி' டிரைலர் </h2><p>

இயக்குநர் ராஜா கருப்பசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், 'மொத ராத்திரி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.</p><p> இதோ பாருங்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cfEKCH5MuWc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T08:52:42+00:00</updated>
        </entry>
    </feed>
