<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News</title>
    <subtitle type="html"><![CDATA[Cineulagam provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://cineulagam.com/googlesitemap.xml"></link>
    <id>https://cineulagam.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://cineulagam.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cu/img/logo.png</logo>
            <updated>2026-09-05T12:18:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[இப்படியெல்லாம் பிறந்தநாள் கொண்டாடலாமா வெற்றிமாறன் சார்... குவியும் எதிர்ப்புக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/director-vetrimaran-birthday-celebration-photo-1788592018"></link>
            <id>https://cineulagam.com/article/director-vetrimaran-birthday-celebration-photo-1788592018</id>
            <summary type="text">வெற்றிமாறன்வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவிலிருந்து உலகதரத்தில் ஒரு இயக்குனர் என்று கூட இவரை சொல்லலாம், பொல்லா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வெற்றிமாறன்</h2><p>வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். </p><p>தமிழ் சினிமாவிலிருந்து உலகதரத்தில் ஒரு இயக்குனர் என்று கூட இவரை சொல்லலாம், பொல்லாதவனில் ஆரம்பித்து ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை என பல தரமான படங்களை கொடுத்தவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/510642d4-71c3-4bd6-a05b-2b61ebcb30a7/26-6a9bc2049c5f9.webp' /></p><p> </p><p>இவர் சமீபத்தில் தன் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் கையில் வாள் பாரிசாக கொடுக்க, அதை அவர் தூக்கி பிடித்தார்.</p><p>இதை அருகில் இருந்த எல்லோரும் ஆர்பரித்து கொண்டாட, ஒரு சிலர் ஒரு பொறுப்புள்ள இயக்குனர் இப்படியெல்லாம் செய்யலாமா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c083107a-8fbd-4c41-a3bf-e2f224a0a14e/26-6a9bc20580abf.webp' /></p>]]></content>
            <updated>2026-09-05T11:00:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக மோசமான நிலையில் ஐயம் கேம் இரண்டு நாள் வசூல்... எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dulquer-salmaan-im-game-movie-bo-1788604318"></link>
            <id>https://cineulagam.com/article/dulquer-salmaan-im-game-movie-bo-1788604318</id>
            <summary type="text">ஐயம் கேம்நிகாஷ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் ஐயம் கேம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஐயம் கேம்</h2><p>நிகாஷ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் ஐயம் கேம். </p><p>இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், நாட்கள் ஆக ஆக ஏனோ இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்துகொண்டே வந்தது. </p><p>ஒணம் பண்டிகை முன்னிட்டு வெளிவரும் என நினைத்த நிலையில் தற்போது இந்த படம் ஒரு வாரம் கழித்து இந்த வாரம் வெளிவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab5e9bb3-1c0c-4883-8e46-25361fbd71f7/26-6a9bef9fa1ac1.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p> </p><p>இந்த படத்தின் முதல் பாதி பட்டாசாக இருக்க இரண்டாம் பாதி மிக மோசமான வசூலை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd99c52d-c7cb-4a65-abfe-11b517805e48/26-6a9befa06d3b8.webp' /></p><p> </p><p>இதனால் இப்படத்தின் வசூல் இரண்டாம் நாள் மிக மோசமான நிலைக்கு சென்றது, இரண்டு நாள் முடிவில் இப்படம் ரூ 20 கோடி தான் வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது, </p><p>முதல் நாள் மட்டுமே இப்படம் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த ரிசல்ட் மற்றும் வசூல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T10:33:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ramba-oorvasi-menaka-movie-review-1788593339"></link>
            <id>https://cineulagam.com/article/ramba-oorvasi-menaka-movie-review-1788593339</id>
            <summary type="text">ரம்பா ஊர்வசி மேனகாஅல்லரி நரேஷ் நடிப்பில் தலைப்பிலேயே எதிர்பார்ப்பைத் தூண்டி வெளியாகியுள்ள ரம்பா ஊர்வசி மேனகா திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்ததா என்று...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரம்பா ஊர்வசி மேனகா</h2><p>அல்லரி நரேஷ் நடிப்பில் தலைப்பிலேயே எதிர்பார்ப்பைத் தூண்டி வெளியாகியுள்ள ரம்பா ஊர்வசி மேனகா திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c16a3d04-987b-42c9-b86e-d603b43faf42/26-6a9bc4bc5c81f.webp' /></p><h2> 

கதைக்களம்</h2><p> 

அல்லரி நரேஷ் தனது வீட்டில் உள்ள மேஜிக் புத்தகத்தின் மீது சிறுவயதிலேயே ஆர்வம் கொண்டுள்ளார். 

அந்த புத்தகத்தை திறக்க ஒரு பேட்டர்ன் இருக்கிறது. சிறுவனாக இருக்கும்போதே அதனை திறக்க ஆரம்பிக்கும் நரேஷ் பெரியவனாகியும் அதனை தொடர்கிறார்.
</p><p>
அதற்கு காரணம் புத்தகத்தை திறந்தால் ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரும் பூமிக்கு வந்து வேண்டிய வரத்தை தருவார்கள் என்று அவரது அம்மா கூறியதுதான்.

மேலும் அப்படி நடந்தால் சினிமாவில் ஹீரோவாகிவிடலாம் என்று நினைக்கும் நரேஷ், தனது நாடக கம்பெனி மூலம் பெரிய வருமானம் இல்லாத நிலையில் நிறைய கடன் வாங்கியிருக்கிறார்.
</p><p>
ரம்பா, ஊர்வசி, மேனகாவுக்கு சிலை வைத்து தினமும் வழிபடும் நரேஷ் புத்தகத்தை திறக்க முடியாததால் இந்திரனை அடிக்கடி திட்டுகிறார். 

இதனால் கோபப்படும் இந்திரன், எனக்கு தெரியாமல் ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரும் அவனைக் காண செல்லக்கூடாது என்ற மனநிலையில் இருக்கிறார். </p><p>

ஆனால் அவருக்கு தெரியாமலேயே பூலோகத்திற்கு செல்லும் ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரும் நரேஷிற்கு வரம் கொடுக்க நினைக்க இந்திரனால் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. 

அதன் பின்னர் நரேஷிற்கு நினைத்தபடி வரம் கிடைத்ததா? அவர் ஹீரோ ஆனாரா? என்பதே மீதிக்கதை.
</p><p><br></p><h2>
படம் பற்றிய அலசல்</h2><p> 

நாந்தி திரைப்படத்திற்கு பிறகு பெரிய வெற்றிக்காக போராடி வரும் அல்லரி நரேஷின் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் இது. 

தனக்கே உரிய காமெடி ஜனாரில் களமிறங்கியிருக்கும் நரேஷ், படம் முழுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறார். </p><p>

ஆங்காங்கே சிரிக்க வைக்கும் நரேஷ், ஒரு சில எமோஷனல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். 

ஆனால் முழுப்படமாக திருப்தி அளித்ததா என்றால் அது கேள்விக்குறிதான். ஏனென்றால் ரம்பா, ஊர்வசி, மேனகா என தலைப்பு வைத்துவிட்டு அந்த கதாபாத்திரங்களை சரியாக பயன்படுத்தாததுதான். 

படத்தின் தலைப்பிற்கு ஏற்ப ரம்பா, ஊர்வசி, மேனகா ஆகிய மூவரையும் அழகாக காட்டியிருந்தாலும் அவர்களில் ரம்பாவாக நடித்திருக்கும் ராஷி சிங்கிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.</p><p>

ஊர்வசியான விஷ்ணு பிரியா, மேனகாவான பிரிஷா சிங் இருவரும் வெறுமனே பல காட்சிகளில் நிற்கிறார்கள். என்றாலும் மூவரும் ஒரு பாடலில் கலக்கியிருக்கிறார்கள்.

இந்திரனாக வெண்ணிலா கிஷோர் நல்ல நடிப்பை தந்துள்ளார்.</p><p> அதிலும் அவர் தாரக் பொன்னப்பாவிற்கு ஐடியை கொடுத்து புரிய வைக்கும்போது படும்பாடு செம காமெடி.

ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் மூத்த நடிகர் நரேஷ் இருவரும் நம்மை சிரிக்க வைக்க நிறைய முயற்சிக்கிறார்கள். அவற்றில் ஒரு சில காமெடிகள் மட்டுமே ஒர்க்அவுட் ஆகியுள்ளன.

படத்தின் பிரச்சனையே சுவாரஸ்யமில்லாத திரைக்கதைதான்.</p><p> அம்மா சென்டிமென்டும் (கிளைமேக்ஸ் தவிர) பெரிதாக ஒர்க் ஆகவில்லை. 

சுரபி பெயருக்கு ஹீரோயினாக வந்து போகிறார். சைதன் பரத்வாஜின் இசை ஓகே ரகம். இயக்குநர் சந்திர மோகன் சிந்தாதா நிறைய தடுமாறியிருக்கிறார். </p><p><br></p><h2>

க்ளாப்ஸ்</h2><p> 

அல்லரி நரேஷ் 

ஒரு சில காமெடி காட்சிகள் 

அஜய்யின் கேமியோ </p><h2>

பல்ப்ஸ்</h2><p> 

சுவாரஸ்யம் குறைவான திரைக்கதை

சுமாரான ரைட்டிங் </p><p><b>

மொத்தத்தில் இந்த ரம்பா, ஊர்வசி, மேனகா பார்வையாளர்கள் கேட்ட நகைச்சுவை என்ற வரத்தினை தரவில்லை. </b></p><h3>

ரேட்டிங்: 2.25/5&nbsp;&nbsp;</h3>]]></content>
            <updated>2026-09-05T08:30:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அப்பத்தாவின் சுயரூபத்தை அறியும் லோகு.. தேனை தேடி வந்த மனோ - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizhvaagai-sooda-vaa-serial-latest-episode-1788590011"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizhvaagai-sooda-vaa-serial-latest-episode-1788590011</id>
            <summary type="text">வாகை சூடவாதமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வாகை சூடவா</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. </p><p>இன்றைய எபிசோடில் லோகு அப்பத்தாவின் உண்மையான முகத்தை புரிந்து கொள்ளும் நிலையில், தேன்மொழியை வீட்டிற்கு அழைத்து வர மனோ எடுத்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்துகிறது.
</p><p>
சுமதி ஜீவாவை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள, அதை ரசிக்கும் ஜீவாவை பார்த்து மீனாட்சி கடுப்படைகிறாள். "உன்னை இந்த வீட்டுக்கு விருந்து வைக்க அழைக்கலை, போனா போகட்டும்னுதான் உள்ளே விட்டேன்" என்று கூற, ஜீவாவும் "இது என் மாமியார் வீடு தானே" என்று பதிலடி கொடுக்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ce0a1e2-acd9-4eb8-9b67-944ea94fc61e/26-6a9bb7bd92283.webp' /></p><p>
</p><p>
ஆனால் ஒரு கட்டத்தில் அதிகமாக பேசினால் மீனாட்சி தன்னை வெளியே அனுப்பிவிடக்கூடும் என்பதை புரிந்து கொண்ட ஜீவா, அமைதியாக இருக்க முடிவு செய்கிறான்.

மறுபக்கம் உடல்நலக்குறைவால் அவதிப்படும் சக்தியை லோகு கவனித்துக் கொள்கிறார். </p><p>அவளுக்கு மாத்திரை வாங்கி வந்து கொடுத்து, "நீ ரெஸ்ட் எடு, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று ஆறுதல் கூறுகிறார்.

பின்னர் தூங்கி எழுந்த அப்பத்தா, "உன் பொண்டாட்டி இன்னும் சமைக்கலையா?" என்று லோகுவிடம் கேட்கிறார். சக்திக்கு உடல்நிலை சரியில்லை என்று லோகு கூறியதும், "உடம்பு முடியலன்னா மாத்திரை போட்டுட்டு வேலை செய்ய வேண்டியது தானே" என்று ஈவு இரக்கமின்றி பேசுகிறார். </p><p>இதைக் கேட்டு அப்பத்தா சக்தியை குடும்ப உறுப்பினராக அல்லாமல் ஒரு வேலையாளாகவே பார்க்கிறார் என்பதை லோகு புரிந்து கொள்கிறார்.

வீட்டில் வேலை செய்ய யாரும் இல்லாததால், அப்பத்தா மனோவை அழைத்து தேன்மொழியை கூட்டி வர அனுப்புகிறார். மனோ சுமதி வீட்டிற்கு சென்று கதவை தட்ட, தேன்மொழி கதவை திறக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fccb41c1-8d6d-4eb8-8136-e86a6513779e/26-6a9bb7bcdc41a.webp' /></p><p> </p><p>இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்த தருணம் உணர்ச்சிகரமாக அமைகிறது.

தேன்மொழியை வீட்டிற்கு வருமாறு மனோ அழைக்க, மீனாட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். "அவளுக்காக நீங்க என்ன பண்ணீங்க? உங்க வாரிசை அழிக்க பார்த்தப்போ கூட அமைதியா நின்னீங்க. உங்களை நம்பி எப்படி அவளை அனுப்ப முடியும்?" என்று சரமாரியாக கேள்வி எழுப்புகிறார்.
</p><p>
இதையடுத்து மனோ ஜீவாவையும் வீட்டிற்கு வர அழைக்க, "என் பொண்டாட்டி இருக்கிற இடத்துலதான் நான் இருப்பேன். வர முடியாதுன்னு போய் அப்பத்தாகிட்ட சொல்லு" என்று ஜீவா உறுதியாக பதிலளிக்கிறார்.
</p><p>
இப்படியான சூழலில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய, வாகை சூடவா சீரியலை Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T06:33:39+00:00</updated>
        </entry>
    </feed>
