ரூ. 400 கோடி பட்ஜெட் படத்தில் பாலிவுட் நடிகையுடன் நடிக்கும் பிரபாஸ்.. யார் அந்த நடிகை தெரியுமா
பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
இதனை தொடர்ந்து சலார், ஆதிபுருஷ் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் பிரபாஸ்.
இதன்பின், மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கவுள்ளாராம்.
மேலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு, அமிதாப்பச்சன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.
இந்தநிலையில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நாளை டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஐதராபாத்திலுள்ள தொடங்குகிறதாம்.