50 வருட நாயகி பயணம்... நடிகை ராதிகாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்பெஷல் ஷோ
ராதிகா சரத்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா சரத்குமார் சன் தொலைக்காட்சியில் சித்தி தொடரின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை, அரசி, தாமரை, சந்திரகுமாரி, வாணி ராணி, சித்தி 2 உள்ளிட்ட பல வெற்றித் தொடர்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். கடைசியாக ராதிகா, தாய் கிழவி என்ற படத்தில் நடித்து நடிப்பின் மூலம் அனைவரையும் அசர வைத்தார்.
இவர் இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகா நடிகை இரண்டாவது சீசனில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.

ஸ்பெஷல் ஷோ
வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ராதிகா சினிமாவில் என்ட்ரி கொடுத்து 50 வருடத்தை எட்டிவிட்டதாம்.
இதனால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மகா நடிகை ஷோவில் கலையரசி ராதிகா 50 என ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்து கொண்டாடியுள்ளனர். இந்த ஷோ நாளை ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan