ஈஸ்வரியை கொலை செய்ய வந்த கூலிப்படை கும்பல்.. உச்சகட்ட பரபரப்பில் எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல்
வெற்றிகரமாக சன் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. ஆதி குணசேகரனால் தலையில் அடிபட்டு உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கிறார் ஈஸ்வரி.

அவர் எப்போது சுயநினைவுக்கு வந்து தனக்கு நடந்ததை சொல்லப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது கண்விழித்துவிட்டார். ஈஸ்வரி உண்மையை கூறிவிட்டாள் ஆதி குணசேகரன் சிறைக்கு செல்லவேண்டும் என்பதால், ஈஸ்வரியை கொலை செய்ய முடிவு செய்துவிட்டார் கதிர்வேல்.

உச்சகட்ட பரபரப்பு
அதற்காக மருத்துவமனைக்கு ஒரு கூலிப்படையை அனுப்பிவைத்துள்ளார். இந்த நிலையில், ஈஸ்வரியை கொலை செய்ய அந்த கும்பல் மருத்துவமனை உள்ளே வந்துவிட்டனர்.

ஈஸ்வரியின் மகளும், மருத்துவமனையில் உள்ளவர்களும் அந்த கும்பலை உள்ளே வராமல் தடுக்க முயற்சி செய்த நிலையிலும் முயற்சி கைகூடவில்லை. ஈஸ்வரியின் நிலை என்ன ஆகப்போகிறது, இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri