ஆர்த்திக்கு அந்த நடிகருடன் தொடர்பு என சர்ச்சையாக பேசிய சுசித்ரா.. ஆர்த்தி ரவியின் தந்தை போலீசில் புகார்
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இரண்டு தரப்பும் மாறி மாறி குறைசொல்லி அறிக்கைகள் வெளியிட்டு வந்தனர்.
இனி அறிக்கை வெளியிட கூடாது என இரண்டு தரப்புக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இதுஒருபுறம் இருக்க பாடகி சுசித்ரா இன்ஸ்டாவில் ஆர்த்தி பற்றி பல சர்ச்சையான பதிவுகளை போட்டு வருகிறார்.
போலீசில் புகார்
ஆர்த்திக்கும் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் ஒல்லி நடிகருக்கும் தொடர்பு இருக்கிறது என பாடகி சுசித்ரா இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இப்படி அவதூறாக பேசி வரும் சுசித்ரா மீது ஆர்த்தியின் தந்தை தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.
தற்போது சுசித்ரா தனது சர்ச்சை இன்ஸ்டா பதிவுகள் அனைத்தையும் நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Optical illusion: இந்த படத்தின் சூழ்ச்சியை தாண்டி உங்கள் கண்களுக்கு தெரியும் இலக்ககங்கள் என்ன? Manithan
