2வது நபராக பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து வெளியேறிய அபிஷேக்- அவர் போட்ட முதல் பதிவு, என்ன தெரியுமா?
பிக்பாஸ் 4 சீசன் வரை மக்கள் கணித்த விஷயங்கள் பல அப்படியே நடந்தன. இந்த பிக்பாஸ் 5வது சீசன் மக்கள் நினைக்காதது எல்லாம் நடக்கிறது.
முதலில் போட்டியாளர்கள், தற்போது போட்டிபோடும் பிரபலங்களில் பலரை மக்கள் எதிர்ப்பார்க்கவே இல்லை, பிரியங்கா எல்லாம் வரவே மாட்டார் என்றெல்லாம் மக்கள் நினைத்தார்கள்.
நிகழ்ச்சியும் தொடங்கி 3 வாரங்கள் ஓடிவிட்டன, நாடியா மற்றும் கடந்த வாரம் வீட்டில் இருந்து அபிஷேக் என இதுவரை 2 பேர் வெளியேறிவிட்டார்கள்.
அபிஷேக் வெளியேற வேண்டும் என்பது மக்கள் தீர்ப்பு என்று கூறினாலும் சிலருக்கு அவரையா இதற்குள் அனுப்பிவிட்டார்கள் என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது.
பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து வெளியேறிய அபிஷேக் முதன்முறையாக நிகழ்ச்சி குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், என்னுடைய வாழ்நாள் அனுபவங்களை இந்த நிகழ்ச்சியில் பணயமாக வைத்தேன்.
ஆனால், நான் நானாக தான் இருந்தேன் என்ற மன நிறைவுடனே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன். நிறைவுடனே இருப்பது தான் என்னுடைய மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றால் இப்படித்தான் நான் என்று பதிவிட்டுள்ளார்.