பிக் பாஸ் குறித்து சர்ச்சையாக பேசிய சீசன் 5 போட்டியாளர் அபிஷேக் ராஜா.. என்ன சொன்னார் என்று பாருங்க
நேற்று மிகவும் பிரமாண்டமாக துவங்கிய பிக் பாஸ் சீசன் 5ல் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகர் ராஜு, நமீதா மாரிமுத்து, Iyyki Berry, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட 18 பேர் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் தான் அபிஷேக் ராஜா. இவர், Youtube-ல் திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்து பிரபலமானவர்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து பேசியுள்ளார்.
இதில் " ஊருக்கு தெரியும், உங்களே எல்லாரையும் கேமரா வைச்சு படம்புடிச்சுக்கிட்டு இருக்காங்கனு. கிடைச்ச 100 நாள்-ல CM ஆகிறலாம்னு நினைக்காத" என்று பேசியுள்ளார்.
இவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.