பொன்னியின் செலவன் படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட விபத்து- சோகத்தில் படக்குழு
பிரம்மாண்டத்தின் உச்சமாக ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கி ஹைதராபாத், மத்திய பிரதேசம், பாண்டிச்சேரி என பல இடங்களில் நடந்து வந்தது.
அடுத்தடுத்து நடிகர்கள் தங்களது போஷனை முடித்து வருகிறார். அண்மையில் நடிகர் கார்த்தி படத்தில் இடம்பெறும் தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளார், அதை அவரே தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார்.
தற்போது என்னவென்றால் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவந்த பாபு ஆண்டனிக்கு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளதாம். இன்று அதிகாலை 3 மணியளவில் அவருக்கு அறுவை சிகிச்சை கூட செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் 3 முதல் 4 வாரங்கள் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க கூறியுள்ளார்களாம்.