ரசிகரின் போனை பிடுங்கிய அஜித், பின் ரசிகனிடம் அவர் என்ன கூறியுள்ளார் பாருங்க
தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று தங்களில் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்களில் தங்களின் வாக்குப்பதிவை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் தல அஜித் மற்றும் அவர் மனைவி ஷாலினியுடன் வாக்குபதிவு செய்திருந்தார். அப்போது அவரை சுழுந்த ரசிகர்களில் ஒருவர் மாஸ்க் ஏதும் அணியாமல் செல்பி எடுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அஜித் அவரின் போனை பிடுங்கி வைத்துக்கொண்டார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
அதன்பின் மீண்டும் அந்த ரசிகரை சந்தித்த அஜித் அவரிடம் "மாஸ்க் போடுங்க, Sorry Sorry" என கூறிவிட்டு அவரின் போனை திரும்பி கொடுத்துள்ளார்.
Latest Video Of #Thala AJITH Sir & #ShaliniAjith Madam ....#Ajithkumar #TamilNaduElections#Valimai pic.twitter.com/KlEBoIVHSu
— THALA FANS COMMUNITY™ (@TFC_mass) April 6, 2021