நடிகர் அருண் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. என்ன ஆனது? பரபரப்பில் ரசிகர்கள்!
அருண் விஜய்
சுந்தர். சி இயக்கிய முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி பின் துள்ளித் திரிந்த காலம் படத்தின் மூலம் தனது முதல் வெற்றியை கண்டவர் நடிகர் அருண் விஜய்.
சுந்தர். சி இயக்கிய முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி பின் துள்ளித் திரிந்த காலம் படத்தின் மூலம் தனது முதல் வெற்றியை கண்டவர் நடிகர் அருண்.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவருக்கு திரும்புமுனையாக அமைந்த படம் அஜித்தின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம்.

என்ன ஆனது?
இந்நிலையில், சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு இன்று அதிகாலை மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.