கொரோனாவால் உயிரிழந்த நடிகர் சரவணனின் தங்கையின் கணவர் - ஷாக்கிங் தகவல்
கொரோனாவின் இரண்டாவது அலை உலகளவில் வேகமாக பரவி வருகிறது. அதிலும் இந்தியாவில் மட்டுமே ஒரு நாளைக்கு மூன்று லட்சம் பேருக்குமேல் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு நாளைக்கு சுமார் மூன்று ஆயிரம் பேருக்கு மேல் மரணமடைகின்றனர். திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் தினம்தினம் இறந்து வருகிறார்கள்.
ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் இயக்குனர் கே.வி ஆனந்த், நடிகர் பாண்டு உள்ளிடோர் இறந்துள்ளனர்.
இந்நிலையில், தன்னுடைய தங்கையின் கணவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டதாக, நகைச்சுவை நடிகர் பால சரவணன் தெரிவித்துள்ளார்.
ஆம் நடிகை தனது பால சரவணன் ட்விட்டர் பக்க்கத்தில், " அன்பு நண்பர்களே. இன்று எனது தங்கையின் கணவர் கொரோனா காரணமாக இறந்துவிட்டார். 32வயது.
தயவு கூர்ந்து மிக கவனமாக இருக்கவும். நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். முக கவசம் அணிவீர் " என்று தெரிவித்துள்ளார்.
அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்...32வயது...
— Bala saravanan actor (@Bala_actor) May 6, 2021
தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர்...plss🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾