தனுஷ்-மாரி செல்வராஜ் பட அப்டேட் கேட்டால் தயாரிப்பாளர் சொன்ன குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ், இவரெல்லாம் ஒரு நடிகராக என்ற விமர்சனத்தோடு ஆரம்பித்த தனது சினிமா பயணத்தை இவர் சிறந்த நடிகர் என கூறும் அளவிற்கு தனது நிரூபித்து சாதனை செய்தவர்.
படங்கள் நடிப்பதை தாண்டி தயாரிப்பு, இயக்கம், பாடகர் என பன்முகம் காட்டியுள்ளார். கடைசியான தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியாகி இருந்தது.
அடுத்து தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை என்ற படம் வெளியாக உள்ளது, அப்படத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
புதிய அப்டேட்
இதற்கு இடையில் தனுஷின் 56வது படத்தின் அப்டேட் வெளியாகி இருந்தது.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் தனது 56வது படத்தை இயக்க உள்ளார். சரித்திர கதையில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ஐசரி கே கணேஷ் தயாரிக்க உள்ளார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், மாரி செல்வராஜ், தனுஷ், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளது. ஆனால், அந்த படத்திற்கு முன்பு ஒரு தனுஷ் படம் உள்ளது.
அதற்கு பிறகுதான் மாரி செல்வராஜ் படம். அப்படம் குறித்து அறிவிப்பதற்கு முன்னதாகவே இந்த படத்தை அறிவித்துவிட்டோம். அந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.