எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது.. மனம் திறந்த நடிகர் சர்வானந்த்!
சர்வானந்த்
எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் சர்வானந்த். இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் கணம் திரைப்படம் வெளியானது.
இதில் அமலா அக்கினேனி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடுத்து இவர் நடிப்பில் 'மனமே' படம் திரைக்கு வந்தது.
தற்போது, அவர் 'பைக்கர்' என்ற படத்திலும் 'நரி நரி நாடு முராரி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ஓபன் டாக்!
இந்நிலையில், சமீபத்தில் ஷர்வானந்த் ஒரு மெல்லிய உடலுடன் காணப்பட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
பலர் இவர் எப்படி மாறினார் என்று கேள்வி கேட்டு வந்த நிலையில், இது குறித்து சர்வானந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், தனது மகள் பிறந்த பிறகுதான் ஆரோக்கியம் ஒரு பெரிய வரம் என்பதை உணர்ந்துள்ளேன். என் குடும்பத்திற்காக வலுவாக இருக்க முடிவு செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
