மறைந்த நடிகர் ராஜசேகர் மனைவிக்கு நேர்ந்த கொடுமை.. இப்படியொரு சோகமா?
ராஜசேகர்
சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு என்ன பிரச்சனை நன்றாக சம்பாதிப்பார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு உள்ளது.
ஆனால் எல்லா பிரபலங்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைவது இல்லை, சினிமாவில் சாதித்தாலும் சொந்த வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் தவிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நிழல்கள் படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கியவர் ராஜசேகர்.
ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரை பக்கம் வந்து சீரியல்களிலும் நடித்து வந்தார்.
சோக கதை
தனது மனைவி தாராவுடன், வங்கியில் கடன் வாங்கி ஆசை ஆசையாய் சென்னை வடபழனியில் வீடு ஒன்றை கட்டி வாழ நினைத்துள்ளார், ஆனால் அதற்குள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் வங்கியில் கடனை கட்டச் சொல்லி தாராவிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கணவர் இறப்பிற்கு பிறகு இருந்த சொத்துக்களை விற்று கடனை அடைக்க முயன்றபோது அதையும் சிலர் ஏமாற்றியுள்ளனர்.
கோர்ட்டில் ஜப்தி ஆர்டர் கொடுக்கப்பட்டதால் கோர்ட்டு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ராஜசேகர் மனைவி தாராவை வீட்டிலிருந்து வெளியேற்றி வீட்டுக்கு சீல் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் நடிகர் சங்கத்தை நாடியுள்ளார், தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
