புதிய படத்திற்காக பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூரி... இத்தனை கோடியா?
நடிகர் சூரி
காமெடியனாக கலக்கிக் கொண்டிருந்தவர் இப்போது ஹீரோவாக மிகவும் அழுத்தமான கதைகளாக தேர்வு செய்து நடித்தும் வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாக படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்கிற்கு வந்து பார்த்து படத்தை மிகப்பெரிய வெற்றியடைய வைத்தார்கள்.
காமெடியனாக பல படங்கள் நடித்துள்ள சூரி ஹீரோவாக களமிறங்கி கொட்டுக்காளி, விடுதலை, மாமன், ஏழு கடல் ஏழு மலை நடித்துள்ளார். தற்போது மண்டாடி என்ற படத்திலும் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார்.

சம்பளம்
அடுத்தடுத்து ஹீரோவுக்கான கதைக்களமாக தேடி நடித்துவரும் சூரி அடுத்து இன்று நேற்று நாளை மற்றும் அயலான் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படம் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளனர், இவர்கள் இதற்கு முன் அஜித்தின் குட் பேட் அக்லி, பிரதீப் ரங்கநாதனின் டியூட் ஆகிய படங்களை தயாரித்துள்ளனர்.

படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் இப்படத்திற்காக சூரி வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் தான் வெளியாகியுள்ளது. அதாவது சூரி இந்த புதிய படத்திற்காக ரூ. 25 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan