போனில் கூப்பிட்டு அதிர்ச்சி கொடுத்த விஜய்! என்ன சொன்னார் தெரியுமா?
ரசிகர்கள் அனைவரின் கண்களுக்கும் தற்போது மாஸ்டராக தெரிபவர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் ஜனவரி 13 ல் பொங்கல் சிறப்பு திரைப்படமாக வெளியிடப்படுகிறது.
ரூ 300 கோடி வசூல் செய்ய வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம். இது படக்குழுவினரின் நோக்கமும் கூட. விஜய் அனைவரையும் அரவணைத்து அன்பு செலுத்தி மரியாதையுடன் நடத்துபவர்.
மற்றவர்களின் படங்களையும் பார்த்துவிட்டு அவர்களின் உழைப்பு, திறமையை தயங்காது உடனே குறிப்பிட்டு வாழ்த்தும் பண்பு கொண்டவர்.
இந்நிலையில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான பாவ கதைகளை படத்தை பார்த்துவிட்டு அதில் தங்கம், சத்தார் கேரக்டர் மூலம் அனைவரையும் கவர்ந்த சாந்தனு, காளிதாஸ் படக்குழுவினரை போனில் அழைத்து வாழ்த்தியுள்ளாராம்.
மேலும் இது தான் புது சாந்தனுவா என விஜய் கேட்டாராம். அப்போது காளிதாஸ் விஜய் குரலில் மிமிக்ரி செய்து மகிழ்ந்தாராம்.