விழுந்து விழுந்து சிரித்த விஜய்! எல்லாம் இந்த ஒரு வசனம் தான்! பிரபல நடிகர் ஓபன் டாக்
விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் வெளியானது. ரூ 200 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்துவிட்டது. அடுத்ததாக அவர் நெல்சன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
விஜய் சினிமாவில் பலருடன் பணியாற்றியுள்ளார். அதில் மிக முக்கியமானவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் விஜய்க்கு மிகவும் பிடித்தவர். விஜய் நடித்த குஷி படத்தை இயக்கியதும் இவரே.
இயக்குனராக இருந்தவர் நடிகராக பல படங்களில் பணியாற்றி வருகிறார். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை படம் திரைப்படம் மார்ச் 5 ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
என்.ஜி.கே படத்திற்கு பின் செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தின் மீது தனி ஆவல் உள்ளது. இப்படத்தின் டிரைலரை பார்த்த விஜய், அதில் இடம் பெற்ற “ஒரு மனுஷன் எவ்ளோ கஷ்டப்படுவான்” என்ற வசனத்தை சொல்லி சொல்லி சிரித்து மகிழ்ந்ததாக எஸ்.ஜே.சூர்யா பத்திரிக்கை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.