விடைபெற்றார் விஜயகாந்த்.. முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்
நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலை 6.10 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்தது.
அங்கு வந்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களும் அதிகம் வந்தனர். இன்று மாலை அங்கிருந்து தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டனர்.

அரசு மரியாதை உடன் அடக்கம்
கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் கோயம்பேடு பகுதியில் இருக்கும் தேமுதிக அலுவலகம் வந்த பின் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.

அதன் பின் அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்து, சந்தன பேழையில் அவரது உடலை வைத்து அடக்கம் செய்தனர்.
