நீண்ட இடைவேளைக்கு பிறகு படங்கள் குறித்து நடிகர் விக்ரம் போட்ட சூப்பர் பதிவு...
நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம், தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்பிற்கு பெயர் போன நடிகர் என ரசிகர்கள் கொண்டாடுவது விக்ரமை தான்.
ஒரு கதைக்காக தன்னை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் வருத்தி நடிக்கக் கூடியவர் விக்ரம், அதற்கு உதாரணம் ஐ படம் என்றே கூறலாம்.
கடைசியாக இவரது நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி இருந்தது, இந்த படத்திற்கும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் தான் வந்தன. அடுத்து விக்ரம் படம் குறித்த அறிவிப்பு வரும் பார்த்தால் நீண்ட மாதங்களாக எதுவும் வராமல் இருந்தது.

பட தகவல்
இந்த நிலையில் நடிகர் விக்ரம் ஒரு சூப்பரான பதிவு போட்டுள்ளார். அதில் அவர், சில நேரங்களில் மௌனம் என்பது தயார் படுத்திக்கொள்வது. என்னை ஈர்க்கும் கதைகளுக்காக காத்திருந்தேன்.
நான் பெரிதும் மதிக்கும் 4 இயக்குனர்களுடன் புதிய படங்களை துவங்குவதால் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை என தெரிவித்திருக்கிறார்.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri