பிரபல பொற்கோவிலில் நடிகை ஆண்ட்ரியா.. அவரே வெளியிட்ட போட்டோஸ்
ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
இதன்பின் வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் பல லட்சம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
போட்டோஸ்
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். இந்த பொற்கோவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ளது.
சீக்கியர்களின் புனிதத் தலமாக இது வழிபடப்படுகிறது. தற்போது, இந்த கோவிலில் அவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

IQ test: சிறுவனின் உண்மையான அப்பா யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu
