நான் நவீனை திருமணம் செய்த காரணமே இதுதான்... ஓபனாக கூறிய நடிகை பாவனா
நடிகை பாவனா
தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா.
தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பின்னர் அசல், ஜெயம்கொண்டான், வாழ்த்துக்கள், தீபாவளி, வெயில் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அஜித் நடிப்பில் வெளியான அசல் படத்திற்கு பிறகு நடிகை பாவனா தமிழில் படங்கள் நடிக்கவில்லை.
ஒரு பேட்டியில் கூட பாவனா பேசும்போது, அசல் படம் தான் தமிழில் எனது கடைசி திரைப்படம் என்று நான் நினைக்கவில்லை, தமிழில் ஏன் எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றும் தெரியவில்லை என கூறியிருந்தார்.

திருமணம்
39 வயதாகும் பாவனா இப்போது படங்கள் நடிப்பது, அதிக போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக தான் உள்ளார். பாவனாவிற்கு கடந்த 2018ம் ஆண்டு நவீன் என்பவருடன் திருமணம் நடந்தது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பாவனா பேசும்போது, நான் Love Failure ஆகி கொஞ்சம் மனக்கஷ்டத்தில் இருந்தேன், அந்த நேரத்தில் தான் நான் அவரை சந்தித்தேன்.
ரெண்டு பேரும் நண்பர்களாக பழகும் போது அவருக்கும் காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது தெரிந்தது. இதனால் இரண்டு பேருக்கும் செட் ஆச்சு, கல்யாணம் செய்தோம் என கூறியுள்ளார்.
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu