பிக்பாஸ் பிரபலம் நடிகைக்கு நேர்ந்த விபத்து! அதிர்ந்து போன மக்கள் - பதற வைத்த சம்பவம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 நிறைவுக்கு வந்துவிட்டது. வரும் வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பு டிவியில் முடிந்துவிடும் என தெரிகிறது. 4 சீசன்களை கடந்து விட்டாலும் முதல் சீசனை ரசிகர்கள் பலரும் மிஸ் செய்கிறார்கள்.
என்ன, நாங்கள் சொல்வது சரிதானே? என்ன இருந்தாலும் பிக்பாஸ் சீசன் 1 போல வராது என இன்னும் நம்மில் பலர் சொல்வோம் தானே.
இதில் தான் பேசும் ஸ்டைலால் பிரபலமானவர் நடிகை நமீதா. அதிலும் அந்த பாத்ரூம் கழுவும் விசயத்தில் வந்த சண்டை தான் எனலாம்.
பிக்பாஸ்க்கு பிறகு அவர் தெலுங்கு சினிமா பட தயாரிப்பாளர் வீர் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப பெண்ணாக மாறிப்போனார் பின் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை.
தெலுங்கு, மலையாளம் சினிமாவில் அவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். பெளவ் வெளவ் என்ற படத்தை தயாரித்து தானும் நடித்து வந்த நமீதா திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். காட்டுப்பகுதியில் கிணற்றின் அருகே ஷூட்டிங் எடுக்கப்பட்டது.
அப்போது நமீதாவின் செல்போன் தவறி கிணற்றுக்குள் விழ அதை தாவி பிடிக்க அவர் முயற்சி செய்த போது கிணற்றில் விழுந்தார். இதனால் அருகே இருந்த மக்கள் பதறிப்போய் கூச்சலிட தொடங்கினர். நமீதாவை காப்பாற்ற ஓடினார்கள். கடைசியில் தான் தெரிந்ததாம் அது படப்பிடிப்பு என.
இந்த செய்தியும் வேகமாக பரவியதாம்.