2 குழந்தைகளை பெற்ற பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள நடிகை நிஷா... எந்த சீரியல் தெரியுமா?
நடிகை நிஷா
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை நிஷா கணேஷ்.
இதன் பிறகு வள்ளி, தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, மகாபாரதம், தலையணை பூக்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

நடிகையை தாண்டி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தனியார் ஷோக்களை தொகுத்து வழங்கி உள்ளார்.
சீரியல்களை தாண்டி இவன் வேற மாதிரி, நான் சிகப்பு மனிதன், வில் அம்பு, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரீ-என்ட்ரி
பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்தவருக்கு இப்போது 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நிஷா கணேஷ் மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மௌனம் பேசியதே தொடரில் சிறப்பு வேடத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri