தளபதி விஜய் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா மோகன்.. என்ன கூறியுள்ளார் என்று பாருங்க
நடிகை பிரியங்கா மோகன்
டாக்டர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பிரியங்கா மோகன்.
இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு டான் படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை பிரியங்கா மோகன் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்.
விஜய் என்னை பாராட்டினார்
இதில் " விஜய் சார் என்னுடைய டாக்டர் படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டினார். அதுமட்டுமின்றி தெலுங்கிலும் நான் நடித்திருந்தார் படத்தையும் சொல்லி என்னை பாராட்டினார் ".
மேலும் பிரியங்கா மோகன், விஜய் அவர்களிடம் நீங்கள் எங்களுடைய படங்கள் எல்லாம் பார்த்தீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு விஜய் " நான் எல்லாருடைய படமும் பார்ப்பேன் " என கூறியதாக பிரியங்கா மோகன் கூறியுள்ளார்.