மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து நடிகை ராதா போட்ட எமோஷ்னல் பதிவு
தமிழ் சினிமாவிற்கு எத்தனையோ நடிகைகள் நடித்திருக்கலாம், இனிமேல் நடிக்க வரலாம்.
ஆனால் என்றுமே ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. அவரது காலத்தில் நடிக்க நடிகைகளே அவரை போற்றி பேசியுள்ளார்கள், அவருக்கு அப்படி ஒரு கிரேஸ் இருந்தது.
பிரபலமாக பெரிய அளவில் இருந்த போதே திடீரென தற்கொலை செய்து இறந்துவிட்டார் நடிகை சில்க் ஸ்மிதா. அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை கூட யாருக்கும் தெரியவில்லை.
செப்டம்பர் 23 அவரது இறந்த நாள் வந்துள்ளது. எனவே நடிகை ராதா அவரை பற்றி சில எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார். அதில் அவர், என்னுடைய முதல் படத்தில் நடித்திருந்தார். கிளாமர் காட்சிகள் எவ்வளவு ஈஸியாக நடிப்பாரோ அந்த அளவிற்கு எமோஷ்னல் காட்சிகளையும் அசால்ட்டாக நடிக்க கூடியவர்.
அவரை போன்ற ஒரு நடிகையை இழந்தது கஷ்டமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
She never needed makeup to look graceful in sari and perform soulful characters. Feel sad to have lost such an artist at her early stage.
— Radha Nair (@ActressRadha) September 24, 2021