அதை செய்துதான் சினிமாவில் வளர்ந்தேன்.. நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்
ரகுல் ப்ரீத் சிங்
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
இதையடுத்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பதிவு..
ரகுல் ப்ரீத் சிங், சினிமா உலகிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு ஆகிறது. அதையொட்டி அவர் தனது ஆரம்பகால புகைப்படம் ஒன்றையும், தற்போதைய புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், "நான் நிறைய அழகான கனவுகளோடு, 10 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் காலடி எடுத்து வைத்தேன். என்னுடைய உழைப்பு மற்றும் கடுமையான முயற்சியால் இந்த நிலைக்கு உயர்ந்தேன்".
"ஒரு நடிகையாக இன்னும் சினிமாவில் நிறைய நான் சாதிக்க வேண்டும். உற்சாகமாக பணியாற்றி சினிமாவில் நிறைய சாதிப்பேன். நான் இந்த நிலைக்கு வர உதவிய அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.