பெண்கள் தானே, தலையில் எழுதியுள்ளது.. நடிகை மீனா குறித்து ரம்பா எமோஷ்னல்
ரம்பா
அழகிய லைலா, அது இவளது ஸ்டைலா என்ற பாடலை கேட்டாலே ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துவிடுவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இடம்பெற்ற இந்த பாடலில் ரம்பா ஆடிய நடனம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது.
90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, போஜ்புரி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது, ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 - ல் நடுவராக வலம் வருகிறார்.
ரம்பா எமோஷ்னல்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை மீனா குறித்து ரம்பா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " மீனா மிகவும் தைரியமான பெண். அவரது தைரியத்திற்கு நான் தலை வணங்குகிறேன். மீனாவின் அம்மாவும் மிகவும் தைரியமானவர்.
ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் பெண்கள் தானே என்று மிகவும் சாதாரணமாக நினைப்பார்கள். மீனாவின் கணவர் இறந்தபோது நான் அவருடன் இருக்க வேண்டும் என்று எனது தலையில் எழுதியுள்ளது. அவருக்கு எப்போதும் நாங்கள் இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
