சார் ரம்பா சார்.. 16 வருடங்களுக்கு பின் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா..
நடிகை ரம்பா
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா.

இதன்பின் செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இதில் உன்னருகே நானிருந்தால் படத்தில், ரம்பாவை பார்த்து நடிகர் பார்த்திபன் 'சார் ரம்பா சார்' என சொல்லும் வசனம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வந்தார். ஆனால், திடீரென சினிமாவிலிருந்து விலகினார். இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது.
16 வருடங்களுக்கு பின்
இந்த நிலையில், 16 வருடங்களுக்கு பின் நடிகை ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கதைகளை கேட்டு அதில் ஓரிரு கதைகளை தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நடிகை ரம்பா மீண்டும் நடிக்க வந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.