47 வயதில் நடிகை ரம்பா எடுத்துள்ள அதிரடி முடிவு- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகை ரம்பா
மலையாள திரையுலகில் 1992ம் ஆண்டு நடிகை ரம்பா தனது 15 வயதில் நடிக்க தொடங்கியுள்ளார். 1993ம் ஆண்டே உழவன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்துள்ளார்.
15 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ரம்பா, ரவீந்தர் என்பவரை திருமணம் செய்துகொண்ட 2 மகள்கள் மற்றும் மகன் பெற்றார்.
நடிகையின் ரீ-என்ட்ரி
வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்துவரும் நடிகை ரம்பா தற்போது மீண்டும் நடிக்க வர இருப்பதாக கூறப்படுகிறது.
சினிமாவை தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன், இப்போது சினிமாவில் டிரெண்ட் மாறியிருக்கிறது.
என் வயதுக்கு ஏற்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன் என ரம்யா கூறிவருகிறார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
