தளபதி விஜய்யுடன் நடிகை சமந்தா முதன்முதலில் எடுத்துக்கொண்ட புகைப்படம், எப்போது தெரியுமா?
நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அந்த வகையில் தமிழை போலவே தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக நடிகை சமந்தா விளங்குகிறார், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா திருமணம் செய்துகொண்ட சமந்தா ஹைதெராபாத்திலே செட்டில்லாகி விட்டார்.
மேலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, கடைசியாக தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி தற்போது இவர் விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார், மேலும் இப்படத்தில் நடிகை நயன்தாராவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா முதலில் நடித்த திரைப்படம் கத்தி, பிளாக் பஸ்டர் ஹிட்டான அப்படத்தை தொடர்ந்து இந்த ஜோடி தெறி திரைப்படத்திலும் நடித்திருந்தனர்.
மேலும் கத்தி திரைப்படத்தின் பூஜையின் போது இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.