திருமணமாகி 2 மாதங்களில் சோபிதா துலிபாலா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்
நாகசைதன்யா
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார்.
நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து, பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இதன்பின் நடிகை சோபிதாவை காதலித்து வந்த நாகசைதன்யா, கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.
அதிரடி முடிவு
இந்நிலையில், திருமணத்திற்கு பின், சோபிதா துலிபாலாவின் தோற்றங்கள் மற்றும் அவர் வெளியிடும் புகைப்படங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, திருமணத்துக்கு முன் தாராளமான மாடர்ன் உடையில் திரையில் தோன்றிய ஷோபிதா இனி அப்படியான வேடங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளாராம். குறிப்பாக நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.