90களில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஸ்வர்யமால்யாவை நியாபகம் இருக்கா?- லேட்டஸ்ட் போட்டோ
ஸ்வர்ணமால்யா
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய பிரபலங்களை ஒருவரையும் மக்கள் மறக்கவில்லை.
அப்படி அந்த காலத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியில் மூலம் பிரபலமடைந்தவர் தான் ஸ்வர்ணமால்யா. பெப்ஸி உமா ஒரு ஸ்டைலில் நிகழ்ச்சிகளை நடத்தினார் என்றால் ஸ்வர்ணமால்யா வேறொரு ஸ்டைல்.
இவரது பரபரப்பான பேச்சை கேட்கவே நிகழ்ச்சியை கண்டவர்கள் பலர் உள்ளார்கள். தொகுப்பாளினியை தாண்டி இவர் அலைபாயுதே, மொழி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
கடைசியாக புலிவால் என்ற படத்தில் நடித்தவர் மலையாளத்திலும் சில படங்கள் நடித்திருக்கிறார்.

லேட்டஸ்ட் க்ளிக்
நடிப்பிலிருந்து விலகி பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
பல காலம் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது ஸ்வர்ணமால்யா ஒரு யூடியூப் பக்கம் ஒன்றை திறந்துள்ளார்.
அதில் தான் செல்லும் இடங்களில் பார்த்தது, பிடித்தது, பிடிக்காதது என அவரது சொந்த விஷயங்கள் குறித்து பகிர்ந்து வருகிறார்.
தற்போது சமூக வலைதளங்களில் வலம் வரும் அவரது லேட்டஸ்ட் போட்டோ,
