40 வயதில் இரண்டாவது திருமணம் ஏன்? முதன்முறையாக கூறிய நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து பின் கே. பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெயர் எடுத்தவர் நடிகை ஊர்வசி.
அதன்பிறகு அபூர்வ சகோதரிகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தாள், அன்பே ஓடிவா என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். 90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

பின் இவர் 2000ம் ஆண்டு நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்தார், 2008ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்.
விவாகரத்திற்கு மனோஜ் குடும்பம் தான் காரணம், அவர்கள் தான் என்னை குடிக்கு அடிமையாகி விட்டார்கள், இதனால் தான் விவாகரத்தும் ஆனது என பேசியுள்ளார்.

மறுமணம் குறித்து நடிகை
குடி என்ற காரணத்தை காட்டி எனது மகளையும் என்னிடம் இருந்து பிரித்துவிட்டனர். அப்போது நான் தனிமையில் மன அழுத்தத்தில் இருந்த போது எங்களுடைய குடும்ப நண்பர் சிவபிரசாத் என்பவரை மறுமணம் செய்துகொண்டேன்.
எனக்கு மறுமணம் ஆகும் போது எனக்கு 40 வயது, அந்த வயதில் மறுமணமா என பலர் விமர்சித்தார்கள். ஆனால் அதை எல்லாம் நான் என் காதில் வாங்கி கொள்ளவில்லை.
தற்போது எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றார்.

கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் இலங்கை பிரபலம் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்- புகைப்படங்கள் இதோ
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய் IBC Tamilnadu