என்னுடைய அப்பாவை அவர்கள் கொன்னுட்டாங்க.. நடிகை விசித்திரா உருக்கம்
90 களில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் விசித்திர. இவர் 1992 -ம் ஆண்டு வெளியான சின்ன தாயி என்ற படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் பல படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

விசித்திரா உருக்கம்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விசித்திரா அவர் வாழ்க்கையில் நடந்த பல மோசமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், " நான் சிறுவயதில் சின்ன தவறு செய்தால் கூட என்னுடைய அப்பா திட்டுவார். என் அப்பா இருந்த கால கட்டத்தில் முகமூடி கொள்ளை சம்பவம் அதிகம் நடந்து வந்தது".
"ஒரு நாள் என்னுடைய அப்பாவை முகமூடி கொள்ளையர்கள் கொன்று விட்டார்கள். என் அப்பாவின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை".
"சமீபத்தில் என் அம்மா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இப்போது என்னுடன் அப்பா, அம்மா யாரும் இல்லை. சகோதரிகளும் வெவ்வேறு இடத்தில் இருக்கின்றனர்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.

டாடா படத்திற்கு பிறகு நடிகர் கவினின் அடுத்த படம்- அட்டகாசமாக வந்த தகவல்
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu