பிச்சைக்காரியாக இருக்கிறேன், எனக்கு யாரும் இல்லை, உதவுங்கள்- கதறி கதறி அழும் நடிகை
தமிழில் ஃப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் இன்னும் சில படங்களில் அண்ணி, அம்மா வேடம் என நடித்தவர் விஜயலட்சுமி.
தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூரில் வசிக்கும் இவர் பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் சமூக வலைதளங்களில் அழுதபடி வீடியோ எல்லாம் பதிவு செய்தார்.
அதன்பிறகு அவரது வங்கி கணக்கில் ரூ. 7 லட்சம் வரை பண உதவி கிடைத்தது என கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி கர்நாடக சினிமா வர்த்தக சபையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அதில் அவர், எனது அம்மா இறந்தவுடன் என்ன செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. சில நண்பர்கள் அந்த சூழ்நிலையில் உதவினார்கள். எனக்கு அழுவதை தவிர வேறு எதுவும் செய்ய தெரியாது, கர்நாடகாவில் நான் பிச்சைக்காரியாக தான் இருக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் நான் பிச்சை எடுத்து இருக்கிறேன். இப்போது எனக்கு என்று யாரும் இல்லை, எனக்கு உதவி செய்யுங்கள் என அழுதபடி பேசியுள்ளார்.