பிரியா, அனிதா சம்பத் இல்லை.. அன்று செய்திவாசிப்பாளர், இன்று முன்னணி நடிகை! இவரா?
நடிகைகள் பிரியா பவானி சங்கர், அனிதா சம்பத் போல் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்து பின் சினிமாவில் நடித்து வரும் பிரபல நடிகை குறித்து உங்களுக்கு தெரியுமா?

ஆம், தெலுங்கில் பிரபல நடிகையாக விளங்கி வரும் இவர் ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இவர் தெலுங்கு ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் அக்காவாக நடித்து வருகிறார். இதுவரை, 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரா?
அவர் வேறு யாருமில்லை, சரண்யா பிரதீப்தான். உள்ளூர் செய்தி சேனலில் ஒரு தொகுப்பாளராக சேர்ந்தார். அதன் பிறகு, ஐதராபாத் வந்து ஒரு பிரபலமான செய்தி சேனலில் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.
பின், தெலுங்கு நடிகர் வருண் தேஜ் சாய், நடிகை பல்லவி நடித்த பிடா (FIDAA) என்ற படத்தில் சாய் பல்லவிக்கு அக்கா வேடத்தில் நடித்திருப்பார். இந்த படம் தமிழில் பானுமதி என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது: திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து IBC Tamilnadu
இழுபறியாக உள்ள தொகுதி பங்கீடு; தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி - தவெக உடன் பேச்சுவார்த்தையா? IBC Tamilnadu