ஆண் குழந்தை தான் வேண்டும் என சொன்ன நடிகர் சிரஞ்சீவி! வெடித்த சர்ச்சை
நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் தற்போது தனது பேத்தி, வேண்டாம் பேரன் தான் வேண்டும் என பேசி இருப்பது சர்ச்சையாக மாறி இருக்கிறது.
மகன் ராம் சரண் மீண்டும் பெண் குழந்தை பெறுவாரா என பயப்படுகிறேன், அவர் மூலமாக தனக்கு பேரன் தான் வேண்டும் என அவர் கூறி இருந்தார். அப்போது தான் குடும்ப பாரம்பரியம் தொடரும் என அவர் தெரிவித்திருந்தார்.

சர்ச்சை
பெண் குழந்தைகளை பற்றி அவர் இப்படி மோசமாக பேசி இருக்க கூடாது என அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக அதிகம் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் சிலரும் சிரஞ்சீவிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். 'ஆண், பெண் என இருவருமே குடும்ப பாரம்பரியத்தை தொடர்பவர்கள் தான்' என அவருக்கு தெரிவித்துள்ளனர்.

புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan