வெங்கட் பிரபு இயக்கத்தில் 24 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் கூட்டணி.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

aravind samy prabhu deva venket prabhu kicha sudeep
By Kathick Sep 07, 2021 11:10 AM GMT
Report

சென்னை 28, அறிமுகமாகி மங்காத்தா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு.

இவர் இயக்கத்தில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கிச்சா சுதீப் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 24 ஆண்டுகள் பின், அரவிந்த் சாமி, பிரபு தேவா கூட்டணி இணையும் என்ற செய்து வந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் ஏற்கனவே கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US