ரோஷினியை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினாரா முக்கிய நடிகை..?
பாரதி கண்ணம்மா விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று. இதிலிருந்து சமீபத்தில் தான், கதாநாயகி ரோஷினி வெளியேறினார்.
ரோஷினிக்கு பதில் வினுஷா தேவி என்பவர் கண்ணம்மாவாக நடிக்கவந்துள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி வெளியேறியது, சீரியலின் TRP குறைய காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரோஷினியை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கண்மணி வெளியேறிப்போவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
நடிகை கண்மணி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்பது தான் காரணம் என்று தெரிவிக்கின்றார்கள்.
இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.ஏனென்றால், தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு தகவலும் கண்மணி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.